ம.பி.,யின் போபாலில் யூனியன் கார்பைட் நிறுவனத்தில் 1984 டிச., 2–3ல் ‘மித்தோ ஐசோசைனட்’ விஷவாயு கசிந்து தாக்கியதில், 3787 பேர் பலியாகினர். 5 லட்சம் பேர் பலவித பாதிப்புக்கு உள்ளாகினர். இதுபோன்று மீண்டும் ஒரு கொடிய சம்பவம் நிகழாமல் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு சார்பில் டிச. 2ல் தேசிய மாசு கட்டுபாட்டு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
* உலகில் இன்றும் கட்டாய வேலை, கடன் கொத்தடிமை, குழந்தை திருமணம் போன்ற நவீன அடிமைத்தனம் தொடர்கிறது. இதை ஒழிக்க ஐ.நா., சார்பில் டிச. 2ல் உலக அடிமைத்தன ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement