வெளிநாட்டு மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற பேராசிரியர் கைது

ஐதராபாத்: ஐதராபாத் பல்கலை கழகத்தில் இந்தி துறையில் பேராசிரியராக இருப்பவர் பேராசிரியர் ரவி ரஞ்சன். அங்கு தாய்லாந்து நாட்டை சேர்ந்த 23 வயது மாணவி ஒருவர் முதுநிலை படிப்பில் சேர்ந்து உள்ளார். மாணவியை இந்தி கற்பதற்காக தனது இல்லத்திற்கு வரும்படி பேராசிரியர் அழைத்துள்ளார். அங்கு சென்ற போது மதுபானம் கொடுத்து மாணவியை பேராசிரியர் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார்.இதுகுறித்து மாணவி அளித்த புகாரில், பேராசிரியர் ரவி ரஞ்சன் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.