6ம் ஆண்டு நினைவு நாள்: ஜெ. நினைவிடத்தில் சசிகலா, டிடிவி தினகரன் ஆதரவாளர்களுடன் தனித்தனியாக மரியாதை…

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 6ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு,  சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்தில் சசிகலா தனது ஆதரவாளர்களுடன் மரியாதை செலுத்தினார். அதுபோல அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்களுடன் வந்து மரியாதை செலுத்தினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.  இதையடுத்து, எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் தலைமையில் அதிமுக வினர் மெரினாவில் உள்ள அவரது சமாதியில் மரியாதை செய்தனர். தொடர்ந்து காலை முதலே  மெரினாவில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் பலர் வந்து தங்கள் அஞ்சலியை செலுத்திவிட்டு செல்கின்றனர்.

இந்த நிலையில்,  தற்போது சசிகலா தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக ஜெயலலிதா நினைவிடம் நோக்கி அஞ்சலி செலுத்தினார். அதுபோல அம்மா மக்கள் முன்னேற்றம் கழக தலைவர் டிடிவி தினகரனும் தனது ஆதரவாளர்களுடன் மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைடத்தில் மரியாதை செலுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.