“தேர்தல் எங்கள் உரிமை; ஆனால் அந்த உரிமைக்காக நாங்கள் யாசகம் செய்யமாட்டோம்!" – உமர் அப்துல்லா

பா.ஜ.க-வின் இந்த 8 ஆண்டுக்கால ஆட்சியில் மிக முக்கியமான, மற்றும் கடும் எதிர்ப்புக்குள்ளான முடிவு என்றால், எல்லோரும் கூறுவது ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியதுதான். ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டதிலிருந்து இதுநாள் வரையில் இன்னும் அங்கு தேர்தல் நடத்தப்படவில்லை.

ஜம்மு – காஷ்மீர்

இந்தாண்டு தேர்தல் நடக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இப்படியிருக்க, தேர்தல் நடத்த பா.ஜ.க அஞ்சுகிறது என ஏற்கெனவே கூறியிருந்த முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, தேர்தல் உரிமைக்காக நாங்கள் யாசகம் செய்யமாட்டோம் என்று தெரிவித்திருக்கிறார்.

அனந்த்நாக் மாவட்டத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் அரசு நிலங்களிலிருந்து மக்களை வெளியேற்றுவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த உமர் அப்துல்லா, “ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்தப்படாததற்கு இதுவும் ஒரு காரணம். மக்களை அவர்கள்(பாஜக) தொல்லைசெய்ய விரும்புகிறார்கள். மக்களின் காயங்களுக்கு மருந்து கொடுப்பதற்குப் பதிலாக, காயத்தை இன்னும் அதிகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம்தான் அவர்களுக்கு இருப்பதாகத் தெரிகிறது.

உமர் அப்துல்லா

இந்த ஆண்டு தேர்தல் நடக்கவில்லை என்றால், அப்படியே இருக்கட்டும். நாங்கள் ஒன்றும் யாசகர்கள் அல்ல, காஷ்மீரிகளும் யாசகர்கள் அல்ல. தேர்தல் என்பது எங்கள் உரிமை. இருந்தாலும் அதற்காக அவர்களிடம் யாசகம் செய்யமாட்டோம்” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.