உரிமம் ரத்து செய்யப்படும்.. மருந்து கடைகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை..!

மருத்துவரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும். கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று, மருந்து கடைகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் சில நாட்களுக்கு முன்பு மருந்து கடைகளில் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, திருவான்மியூர் கடற்கரை சாலையில் உள்ள ஒரு மருந்து கடையில் நடத்த சோதனையில் வலி நிவாரணி மாத்திரைகள் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்கப்பட்டதும், பெரும் அளவில் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. அதனை அடுத்து அந்த மருத்து கடைக்கு மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இந்த நடவடிக்கையை தொடர்ந்து, வலி நிவாரண மாத்திரைகளை போதை வஸ்துகளாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் யாருக்கும் மருந்துகளை விற்பனை செய்யக் கூடாது.

மேலும், மருத்துவரின் சீட்டு இல்லாமல் மனநோய், தூக்க மாத்திரை, வலி நிவாரண மாத்திரைகளை விற்றால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.