பனை ஓலை வெட்டிய முதியவர் உயரழுத்த மின்கம்பி உரசியதால் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..!

புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளச்செட்டிவயல் கிராமத்தில், பனை மரம் ஏறி பனையோலை வெட்டிய 70 வயது முதியவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

உயரழுத்த மின்கம்பி உரசியதால் கை, கால்கள் கருகி மரத்திலேயே முதியவரின் உயிர் பிரிந்தது.

பனை மரம் தீப்பற்றி எரிவதை கண்டு கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்த தீயணைப்பு வீரர்கள், ராமன் என்ற அந்த முதியவரின் உடலை கயிறு கட்டி கீழே இறக்கினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.