கர்நாடக வனத்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ராஜாவின் உடலை உறவினர்கள் வாங்க ஒப்புதல்..!

சேலத்தில் கர்நாடக வனத்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ராஜாவின் மனைவி மற்றும் உறவினர்களுடன், தமிழ்நாடு அரசு அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, அவர்கள் உடலை வாங்க ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக வனத்துறையினர் மீது வழக்குப்பதிவு, கர்நாடக அரசிடமிருந்து 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தரவேண்டும் என வலியுறுத்திய ராஜாவின் உறவினர்கள், உடற்கூராய்வு செய்யவும், உடலை பெற்றுக்கொள்ளவும் மறுப்பு தெரிவித்திருந்தனர்.

பேச்சுவார்த்தை நடத்திய தமிழ்நாடு அரசு அதிகாரிகள், இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.