லாகூர்: பாகிஸ்தானில் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 26 வயதான மர்வியா மாலிக். கடந்த 2018ம் ஆண்டு அந்நாட்டின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளராகி சாதனை படைத்தார். இவர் திருநங்கைகளின் உரிமைகளுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகிறார். இதனால், அவருக்கு அவ்வபோது போன் மூலம் கொலை மிரட்டல்கள் வந்துள்ளன.
இந்நிலையில், லாகூரில் கடந்த வியாழக்கிழமை மருந்து வாங்கிக் கொண்டு வீடு அருகே வந்த மர்வியா மாலிக் மீது 2 மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்ய முயன்றுள்ளனர். இந்த சம்பவத்தில் மர்வியா உயிர் தப்பினார். அண்மையில் இவர் அறுவை சிகிச்சை செய்து லாகூர் திரும்பிய நிலையில், இந்த கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து போலீ சார் தீவிரமாக விசா ரிக்கின்றனர்.