அடிப்பட்டு கிடந்த நாரைக்கு மறுபிறவி கொடுத்த இளைஞர்.. நண்பனாக மாறிய நாரை – பறவையின் பாசப்பிணைப்பு..!

அடிப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நாரையை மீட்டு இளைஞரொருவர் காப்பாற்றிய நிலையில், கடந்த ஒரு வருடமாக அந்த பறவை விட்டுப் பிரிய மனமின்றி, அவரை பின்தொடர்ந்து பறப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தைச் சேர்ந்த ஆரீஃப் என்பவர் ஓராண்டுக்கு முன்பு, சாலையோரத்தில் காயமடைந்து கிடந்த நாரையை மீட்டு சிகிச்சை அளித்து, நாரை குணமாகும் வரை தனது வீட்டில் வைத்து, உணவளித்து வந்துள்ளார்.

இதனால், அந்த நட்பு மிகுந்த நாரை, ஆரிஃப் எங்கு சென்றாலும் நிழல் போல் பின் தொடர்ந்து அவருடன் செல்கிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.