விவசாயிகள் உதவித் தொகையாக ரூ 16,000 கோடி வழங்குகிறார் பிரதமர் மோடி.. நாளை 8 கோடி வங்கிக்கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுகிறது..!

நாடு முழுவதும் 8 கோடி விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் 13வது தவணை உதவித்தொகையை நேரடியாகச் செலுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

கர்நாடகாவில் புதிதாகக் கட்டப்பட்ட சிவமொக்கா விமான நிலையத்தைப் பார்வையிட உள்ள பிரதமர், மாநிலத்தின் பெல்காவி உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு நலத்திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்ட உள்ளார்.

சிவமொக்காவில் சுமார் 450 கோடி ரூபாய் செலவில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. மணிக்கு 300 பயணிகளை இந்த விமானநிலையம் கையாள முடியும். அத்துடன் விவசாயிகளுக்கான உதவித் தொகையை நாளை பிரதமர் வழங்க உள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.