Trisha: இன்று சிம்பு, த்ரிஷாவுக்கு ஸ்பெஷல் நாள்: நீங்க ஏன் கணவன், மனைவியாகக் கூடாதுனு கேட்கும் ரசிகாஸ்

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா உள்ளிட்டோர் நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா படம் கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26ம் தேதி ரிலீஸானது. அந்த படத்தில் ஜெஸியாக வந்த த்ரிஷாவை ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

த்ரிஷா, சிம்பு இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. கார்த்திக், ஜெஸி இடையேயான காதல் இன்றும் கொண்டாடப்படுகிறது.

அந்த விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தை எப்பொழுது தான் எடுப்பீர்கள் என கவுதம் மேனனிடம் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் விண்ணைத் தாண்டி வருவாயா படம் ரிலீஸாகி இன்றுடன் 13 ஆண்டுகள் ஆகிவிட்டது.

இதையடுத்து #VinnaithaandiVaruvaayaa, #Trisha, #13YearsOfVTV ஆகிய ஹேஷ்டேகுகளுடன் ரசிகர்கள் ட்வீட் செய்து வருகிறார்கள். அதனால் அந்த மூன்று ஹேஷ்டேகுகளுடம் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது.

விண்ணைத் தாண்டி வருவாயா படம் குறித்து பேசுவதுடன், தங்களுக்கு பிடித்த காட்சி வீடியோ, புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள் ரசிகர்கள். உலகத்தில் எவ்வளவோ பெண் இருந்தும் நீங்க ஏன் ஜெஸியை காதலித்தீர்கள் என ரசிகர்கள் சிம்புவிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

விண்ணைத் தாண்டி வருவாயா குறித்து ரசிகர்கள் மேலும் கூறியிருப்பதாவது,

இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை எப்பொழுது பார்த்தாலும் கண்ணீர் வருகிறது. இந்த படத்தை கொடுத்ததற்காக கவுதம் மேனனுக்கு நன்றி.

விண்ணைத் தாண்டி வருவாயாவை பார்த்து என் இதயம், கிட்னி, லிவர் எல்லாம் உடைந்துவிட்டது. ஆனாலும் திரும்பத் திரும்ப பார்க்கிறேன். நம்மை போட்டுத் தாக்கும் அந்த காதல் தாக்குதல் நடந்து 13 வருடங்கள் ஆகிவிட்டது.

காதல் பிரிவின் வலி கூட சில சமயங்களில் இன்பமே. அதை புரிய வைத்த ஜெஸிக்கு நன்றி என தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே ரசிகர்கள் வித்தியாசமான கோரிக்கை விடுத்துள்ளார்கள். சிம்புவுக்கும், த்ரிஷாவுக்கும் 40 வயதாகியும் இன்னும் திருமணம் நடக்கவில்லை. பொருத்தமில்லாத ஒருவரை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து வரை செல்லக் கூடாது என்கிற பயம் இருவருக்கும் இருக்கிறது.

அந்த பயம் பற்றி இருவருமே வெளிப்படையாக தெரிவித்தார்கள். இந்த விஷயத்தில் சிம்புவும், த்ரிஷாவும் ஒன்று தான். யாரோ ஒருவரை நினைத்து பயப்படுவதை விட்டுவிட்டு நீங்கள் இருவரும் ஏன் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழக் கூடாது என்கிறார்கள் ரசிகர்கள்.

சிம்பு, த்ரிஷா ஆகிய இருவர் வாழ்விலும் காதல் வந்து போயிருக்கிறது. ஆனால் திருமணம் கைகூடவில்லை. அப்படி இருக்கும்போது சிம்புவும், த்ரிஷாவும் திருமணம் செய்து கொண்டால் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Nayanthara: அஜித்தா நாமானு ஒரு கை பார்த்துடலாம்: கணவருக்கு வில்லங்க ஐடியா கொடுத்த நயன்தாரா?

சிம்புவுக்கும், இலங்கையை சேர்ந்த பெண் ஒருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது, விரைவில் திருமணம் என தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவலில் உண்மை இல்லை என சிம்பு தரப்பில் இருந்து விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும் சிம்புவுக்கு திருமணம் நிச்சயமானால் அதை முதலில் மீடியாவிடம் தெரிவிப்போம் என கூறியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.