மோடியை சந்தித்த தம்பிதுரை: எடப்பாடி அனுப்பிய தூது? என்ன காரணம்?

அதிமுகவில்

டெல்லியில் முக்கிய தலைவர்களை சந்தித்து தனது நிலைப்பாட்டை விளக்க வேண்டும் என்றால் தம்பிதுரையை அனுப்புவார். தம்பி துரையும் மோடி முதல் எந்த தலைவரையும் சந்தித்து கடத்த வேண்டிய தகவலை கடத்தி உரிய பதிலைப் பெற்று எடப்பாடி பழனிசாமியிடம் சேர்த்துவிடுவார்.

சமீபத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சமயத்தில் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை இரு அணிகளில் யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதுமட்டுமல்லாமல் பாஜகவும் தாங்கள் ஆதரவு யாருக்கு என்பதை வெளிப்படையாக அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது.

இவ்வளவு பிரச்சினைகள் போய்க்கொண்டிருந்த போது தம்பி துரை பிரதமர் மோடியை சந்தித்தார். அதன்பின்னர் நடைபெற்ற அத்தனை நிகழ்வுகளிலும் எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கியிருந்தது.

தற்போது பாஜக நிர்வாகிகளும், அதிமுக நிர்வாகிகளும் வார்த்தையால் பல இடங்களில் மோதி வருகின்றனர். பாஜகவிலிருந்து விலகுபவர்கள அதிமுகவில் இணைவதும், எடப்பாடி பழனிசாமி புகைப்படத்தை பாஜகவினர் எரிப்பதும் நடந்து வருகிறது. இதனால் அதிமுக – பாஜக கூட்டணியில் விரிசல் விழுந்துள்ளதா, 2024 மக்களவைத் தேர்தல் வரை கூட்டணி தாங்குமா என்று விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்த சூழலில் முன்னாள் மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக மாநிலங்களவை உறுப்பினருமான தம்பிதுரை பிரதமர் மோடியிடம் பேசியிருப்பது கவனம் பெற்று வருகிறது. கூட்டணி தொடர்பாக முக்கிய தகவலை எடப்பாடி பழனிசாமி தம்பிதுரை மூலம் பாஸ் செய்துள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் அதிமுக வட்டாரத்தில் இது குறித்து விசாரிக்கும் போது, மாநிலங்களவை உறுப்பினர் தம்பி துரைக்கு இன்று பிறந்தநாள். எனவே பிரதமரைச் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். வேறு அரசியல் ரீதியாக பேசவில்லை என்று கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.