கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை: மக்களே தயாராகிக்கோங்க! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இன்று ஆகஸ்ட் 9ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக நாளையும், நாளை மறுநாளும் (ஆகஸ்ட் 10, 11) தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே சமயம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும்

அடித்து வெளுக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 12 முதல் 15ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலையை பொறுத்தவரை இன்றும் நாளையும் அதிகபட்சமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் 38 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இயல்பிலிருந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்க கூடும்.

மதுரை விமான நிலையத்தில் இன்று முதல் மதுரை to கோவா விமான சேவை

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக அதிகபட்ச வெப்பநிலை மதுரையிலேயே பதிவாகி வந்த நிலையில் நேற்று பாளையங்கோட்டை அந்த முதல் இடத்தை தட்டிப் பறித்துள்ளது. அங்கு மாநிலத்திலேயே அதிகபட்சமாக 39.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.