7 மல்டி டிராக்கிங்… ரூ.32,500 கோடி மதிப்பில் ரயில்வே திட்டங்கள்… மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ரயில்வே துறையில் 32, 500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி இருப்பு பாதைகளை அமைக்கும் 7 “மல்டி டிராக்கிங்” திட்டங்களை செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு முழு நிதியுதவி அளிக்கும் இந்த திட்டங்கள் உத்தரப் பிரதேசம், பீகார், தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 9 மாநிலங்களில் 39 மாவட்டங்களை உள்ளடக்கி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த திட்டத்தின் மூலம் 32,500 கோடி ரூபாய் செலவில் இந்திய ரயில்வேயின் நெட்வொர்க்கை 2, 339 கிலோமீட்டர் நீளம் அதிகரிக்கப்படும் வகையில் இருப்பு பாதைகள் அமைக்கப்படவுள்ளது. இந்த 7 மல்டி டிராக்கிங் திட்டத்தின் மூலம் இந்த 9 மாநிலங்களில் பல்லாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும்.

மேலும் ரயில் போக்குவரத்துக்கான இருப்பு பாதைகளை அதிகரிப்பது, ரயில் போக்குவரத்தை சீராக்குவது, கூட்ட நெரிசலை குறைப்பது மற்றும் பயணிகளின் பயணத்தில் எந்த தடையும் ஏற்படாமல் உறுதி செய்வது ஆகியவை இந்த திட்டத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘பிரதம மந்திரி கதி ஷக்தி’ தேசிய திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.