ரூ.32, 500 கோடி மதிப்பிலான ரெயில்வே திட்டங்களுக்கு மத்திய மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல்..!

புதுடெல்லி,

டெல்லியில் இன்று நடந்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபை கூட்டத்தில் ரெயில்வே துறையில் ரூ.32, 500 கோடி மதிப்பிலான இருப்பு பாதைகளை அமைக்கும் 7 “மல்டி டிராக்கிங்” திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டங்கள் உத்தர பிரதேசம், பீகார், தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 9 மாநிலங்களில் 35 மாவட்டங்களை உள்ளடக்கி கட்டமைக்கப்படும்.

இத்திட்டத்தின்படி ரூ.32,500 கோடி செலவில் இந்திய ரெயில்வேயின் 2, 339 கிலோமீட்டர்கள் இருப்பு பாதைகள் உருவாக்கப்படும். இந்த 9 மாநிலங்களில் பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும் இதன் மூலம் உறுதி செய்யப்படும். இருப்பு பாதைகளை அதிகரித்தல், ரெயில் போக்குவரத்தை சீராக்குதல், பயணிகளுக்கு நெரிசலை குறைத்தல் மற்றும் பயணிகள் தடையின்றி பயணம் மேற்கொள்வதை உறுதி செய்தல் ஆகியவை இந்த திட்டங்களின் நோக்கமாகும்.

மக்களால் எளிதில் விரைவாக பயன்படுத்த கூடிய ஒரு போக்குவரத்து அமைப்பை உருவாக்கும் ‘பிரதம மந்திரி கதி ஷக்தி’ தேசிய திட்டம் எனும் மிகப்பெரும் திட்டத்தின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.