மன்னார்குடி: வீட்டில் பதுக்கியிருந்த 140 கிலோ குட்கா பறிமுதல்! – திமுக கவுன்சிலர் உட்பட இருவர் கைது

மன்னார்குடியில் தி.மு.க கவுன்சிலர் ஒருவரின் வீட்டில் போலீஸார் 140 கிலோ குட்கா மற்றும் ரூ.4 லட்சம் பணம் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தி.மு.க கவுன்சிலர் உள்ளிட்ட இருவரை போலீஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள ஹரித்ராநிதி தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சிவசங்கர். இவர் மன்னார்குடி நகராட்சியில் 3வது வார்டு தி.மு.க கவுன்சிலராக இருக்கிறார். வெற்றிலை, சீவல் உள்ளிட்ட பொருள்கள் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்கின்ற கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் மன்னார்குடி போலீஸார் ரோந்து பணியில் ஈடுப்பட்டுள்ளனர். அப்போது ஆவிக்கோட்டையை சேர்ந்த சேகர் என்பவர் இருசக்கர வாகனத்தில் மூட்டை ஒன்றை ஏற்றி சென்றுள்ளார். அவர் மீது சந்தேகம் அடைந்த போலீஸார், அவரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த மூட்டையில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்டவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் சிவசங்கரிடமிருந்து குட்கா வாங்கி சென்றதாக அவர் தெரிவித்துள்ளார். சிவசங்கர் தி.மு.க கவுன்சிலர் என்பதால் மன்னார்குடி டி.எஸ்.பி அஸ்வத் ஆண்டோ ஆரோக்கியராஜிடம் இது குறித்து போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு, போலீஸ் டீமுடன் அவரும் சென்று சிவசங்கர் வீட்டில் ஆய்வு செய்துள்ளார்.

மன்னார்குடி தி.மு.க கவுன்சிலர் சிவசங்கர்

இதில் 140 கிலோ குட்கா மற்றும் பான்மசாலா மற்றும் அவை விற்பனை செய்த பணம் ரூ. 4 லட்சம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட குட்காவின் மதிப்பு 1 லட்சத்து 37,000 இருக்கும் என போலீஸார் கணக்கிட்டனர். இதனை தொடர்ந்து சிவசங்கர் மற்றும் சேகர் இருவரையும் கைது செய்து மன்னார்குடி கிளை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் மன்னார்குடி தி.மு.க வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து விபரம் அறிந்த வட்டாரத்தில் பேசினோம், “கவுன்சிலர் சிவசங்கர், பல ஆண்டுகளாகவே குட்கா மொத்தமாக வாங்கி வந்து சில்லறை வியாபாரம் செய்து வருவதுடன் மன்னார்குடியை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சப்ளை செய்து வந்தார்.

கொரோனா சமயத்தில் குட்கா விற்பனையில் கொடிகட்டி பறந்தார். அவருக்கு சீட் கொடுக்கும் போதே சிலர் பின்னாளில் சர்ச்சை ஏற்படும் என்று சொன்னார்கள். அதே போல் இப்போது அவர் வீட்டில் குட்கா பறிமுதல் செய்திருப்பதுடன் அவரையும் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.