இந்திய கிரிக்கெட் அணிக்கு சோனியா காந்தி வாழ்த்து

புதுடெல்லி,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இறுதிப்போட்டி இன்று நடைபெறவுள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு இறுதிப்போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. நடப்பு உலகக்கோப்பை போட்டியில் தோல்வியே சந்திக்காத அணியாக திகழும் இந்திய அணி இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. இதேபோல் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று 6வது முறையாக கோப்பையை கைப்பற்ற ஆஸ்திரேலியா அணி முனைப்பு காட்டி வருகிறது.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணிக்கு சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடும் இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள். நாட்டிற்கு நீங்கள் தொடர்ந்து பெருமை சேர்க்கிறீர்கள். இறுதிப்போட்டிக்கான உங்கள் பயணம் மிகவும் உத்வேகமளிக்கிறது. ஒற்றுமை, கடின உழைப்பு, உங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை என மதிப்புமிக்க பல பாடங்களைக் கொண்டுள்ளது.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.