ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாஹு வீட்டில் இருந்து கடந்த வாரம் ரூ.350 கோடியை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். இப்பணத்தை எண்ணி முடிக்கவே இரண்டு நாள்கள் எடுத்துக்கொண்டது. ஒடிசா மற்றும் ஜார்க்கண்டில் ரெய்டு நடத்தப்பட்டு இப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தியாவில் வருமான வரித்துறை இந்த அளவுக்கு அதிகமான பணத்தை பறிமுதல் செய்தது இதுவே முதல் முறை என்று சொல்லப்படுகிறது. இது குறித்து சோசியல் மீடியாவில் வீடியோக்கள், புகைப்படங்கள் வைரலானது.
காங்கிரஸ் கட்சி ஊழல் செய்து சேர்த்த பணம் என்று பா.ஜ.க.செய்தி பரப்பியது. இது குறித்து பிரதமர் கூட காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக விமர்சித்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து இது வரை கருத்து தெரிவிக்காமல் இருந்த எம்.பி.தீரஜ் சாஹு முதல் முறையாக அது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

தீரஜ், ”எங்களது குடும்பம் நீண்ட காலமாக மது விற்பனை தொழில் செய்து வருகிறது. அந்த தொழிலை எனது குடும்பம் கவனித்துக்கொள்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் எனக்கு சொந்தமானது கிடையாது. எங்களது கம்பெனிக்கு சொந்தமானது. அந்த பணத்திற்கும் காங்கிரஸ் கட்சி அல்லது வேறு எந்த வித அரசியல் கட்சிக்கும் தொடர்பு கிடையாது. நான் 35 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். முதல் முறையாக இது போன்ற குற்றச்சாட்டு என் மீது எழுந்துள்ளது. இது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது.
எங்களது குடும்பம் 100 ஆண்டுகளாக மது விற்பனை தொழில் செய்து வருகிறது. நான் அரசியலில் இருப்பதால் தொழிலில் கவனம் செலுத்தவில்லை. எனது குடும்பம் தான் கவனித்துக்கொண்டது. எனக்கு மொத்தம் 6 சகோதரர்கள். நாங்கள் அனைவரும் கூட்டுக்குடும்பமாக இருக்கிறோம். பறிமுதல் செய்யப்பட்ட பணம் கம்பெனி பணம் ஆகும். எங்களது தொழில் வெளிப்படையானது.

மது விற்பனை ரொக்கமாகத்தான் நடைபெறும். அப்படி மது விற்ற பணம் தான் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எனது குடும்ப உறுப்பினர்கள் வருமான வரித்துறைக்கு விளக்கம் கொடுப்பார்கள். அனைத்திற்கும் கணக்கு கொடுப்போம்”என்று தெரிவித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.