MS Dhoni: SA20ன் இரண்டாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த புதன்கிழமை ஜனவரி 10 அன்று தொடங்கிய இந்த லீக்கின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன்களான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், ஜோபர்க் சூப்பர் கிங்ஸை எதிர்கொண்டது. குக்பெர்ஹாவில் மழை காரணமாக தொடக்க நாளில் எந்த ஆட்டமும் நடைபெறவில்லை. SA20ஐ மினி-ஐபிஎல் என்றும் அழைக்கலாம், ஏனெனில் அந்த லீக்கில் உரிமையை கொண்டுள்ள ஆறு அணிகள் ஏற்கனவே ஐபிஎல்லில் ஒரு அணியை சொந்தமாக வைத்துள்ளனர். எனவே SA20 அணிகளை ஐபிஎல் அணிகளின் சகோதரி உரிமையாளர்கள் என்று அழைக்கலாம்.
MS Dhoni has started the practice for IPL 2024. pic.twitter.com/wnbkO9bXfD
— Johns. (@CricCrazyJohns) January 12, 2024
SA20 மற்றும் IPLல் உள்ள அணிகளுக்கு ஒரே உரிமையாளர்கள் இருந்தாலும், எம்எஸ் தோனி, ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் மற்றும் பல முன்னணி வீரர்கள் தென்னாப்பிரிக்க லீக்கில் பங்கேற்க முடியாது. ரோஹித் மற்றும் ராகுல் போன்றவர்கள் இன்னும் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடி வருகின்றனர். எனவே அவர்களால் SA20 இல் பங்கேற்க முடியாது. ஆனால் 2020ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற எம்எஸ் தோனியும் SA20 விளையாட முடியாது. தோனி SA20 விளையாடாமல் இருப்பதற்கும் சில விதிகளே காரணம். பிசிசிஐ விதிகளின்படி, வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாட இந்திய வீரர் இந்திய கிரிக்கெட்டிலிருந்து விலக வேண்டும். இந்திய கிரிக்கெட் என்பது சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் மட்டும் அல்ல. இதில் ஐபிஎல் போட்டிகளும் அடங்கும். தோனி சர்வதேச அல்லது உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவதில்லை என்றாலும், அவர் ஐபிஎல்லில் இன்னும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். தோனி ஐபிஎல்லில் விளையாடும் வரை SA20 லீக்கில் விளையாட முடியாது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகா உள்ள தோனி, ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் வழிகாட்டியாக கூட இருக்க முடியாது.
ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்றவுடன் தோனி ஜேஎஸ்கே அல்லது உலகெங்கிலும் உள்ள எந்த லீக்கிலும் விளையாடலாம். தோனி என்ற பெயர் இந்திய கிரிக்கெட்டின் மிகவும் பிரபலமான பெயர்களில் ஒன்றாகும், மேலும் அவர் SA20 அல்லது வேறு ஏதேனும் லீக்கில் விளையாட முடிவு செய்தால் அவரை தங்கள் அணியில் எடுக்க ஒவ்வொரு அணியும் போட்டி போடும். அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் குழுவும் ஒரு அணியை வைத்திருக்கிறது. அமெரிக்காவில் அவர்களின் அணி டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் என்று அழைக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய அம்பதி ராயுடு தற்போது துபாயில் நடைபெற உள்ள ILT20 போட்டியில் விளையாட உள்ளார். நீண்ட நாட்களுக்கு முன்பே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று இருந்தாலும், ஐபிஎல் போட்டியில் விளையாடியதால் அவர் வேறு எந்த நாட்டிற்கும் விளையாடவில்லை. இந்நிலையில், ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்றவுடன் தற்போது இந்த லீக்கில் விளையாட உள்ளார்.