சிவகாசி: குடும்ப பிரச்னையில் உறவினர் கொலை – ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவர் உட்பட 3 பேர் கைது!

சிவகாசி அருகே, குடும்ப பிரச்னையை பேசி தீர்க்க சென்ற இடத்தில் உறவினரை வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “சிவகாசி ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்த கணேசன்(37). இவரின் மனைவி தேவி. கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில், ஒவ்வொரு முறையும், கணவன்-மனைவிக்கு இடையேயான பிரச்னையை பேசுவதற்காக தேவி தரப்பிலிருந்து அவருடைய அக்கா முத்துமாரியும், அவருடைய கணவர் தங்கப்பாண்டியனும் சென்று சமாதானம் செய்து வைத்துள்ளனர்.

விசாரணை

இந்தநிலையில் சமீபத்தில், கணேசன்-தேவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையில் தேவி கோபித்துக்கொண்டு அவரின் தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி பிள்ளைகளை பார்ப்பதற்காக கணேசன் தனது மாமியார் வீட்டுக்கு சென்றிருக்கிறார். அங்கு வைத்து மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே பிரச்னை வெடித்துள்ளது. இதில் கோபப்பட்ட தேவி, தனது கணவர் கணேசனை கீழே தள்ளி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது‌. இதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்ட கணேசன், தனது மனைவி தன்னை பிரிந்து வாழ்ந்து வருவதற்கு தேவியின் அக்கா முத்துமாரியும், அவருடைய கணவர் தங்கப்பாண்டியனும் தான் காரணம் என்றுக்கூறி அவர்களது வீட்டுக்கு சென்று சத்தம் போட்டுள்ளார்.

இந்த தகவலை அறிந்த தங்கப்பாண்டியன் தனது கூட்டாளிகளுடன், இரவில் (16-ந்தேதி) கணேசனின் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டிருக்கிறார். இதில் ஆத்திரமடைந்த அவர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து உறவினர் என்றும் பாராமல் கணேசனை வெட்டியதாக கூறப்படுகிறது.

கொலை செய்யபப்ட்ட கணேசன்

இதில் படுகாயமடைந்த கணேசனை, உறவினர்கள் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கணேசன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்ததையடுத்து இந்த தகவல் போலீஸூக்கு தெரியப்படுத்தப்பட்டது. இதற்கிடையில் கொலை தொடர்பாக, சிவகாசி நகர் காவல் நிலையத்தில் தங்கபாண்டியன் சரணடைந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் தங்கப்பாண்டியன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கொலை சம்பவத்தில் அவருக்கு உதவியாக செயல்பட்ட இந்திரா நகரை சேர்ந்த மாரிச்செல்வம், சிலம்பரசன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட மூவரும் இன்று நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்” என்றனர்.

கைதுசெய்யப்பட்ட தங்கப்பாண்டியன் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். அவரின் மனைவி முத்துமாரி, சிவகாசி அருகே உள்ள ஆணையூர் பஞ்சாயத்தில் ஊராட்சி மன்ற துணைத்தலைவராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.