Prevention of cock-sacrificing events | சேவல் பலியிடும் நிகழ்ச்சி தடுப்பு

கோழிக்கோடு: கேரளாவில் திருவிழா காலங்களில் கோவில்களில் சேவல்கள் பலியிடுவது வழக்கமாக இருந்தது.

கடந்த 1968ல் பறவைகள் மற்றும் விலங்குகள் வதை செய்யும் நடைமுறைக்கு தடை விதித்து, விலங்கு வதை தடுப்பு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இருப்பினும், ஒரு சில கோவில்களில் தடையை மீறி சேவல்கள் பலியிடுவது நடந்து வருகிறது. இந்நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தின் சோம்பாலா கிராமத்தில் உள்ள ஸ்ரீ புதாரி சாத்தோத் கோவிலில் சேவல் பலியிட உள்ளதாக தகவல் வெளியானது.

இது குறித்து கோழிக்கோடு போலீசில், விலங்கு நல உரிமைகள் ஆணையமான ‘பீட்டா’ புகார் அளித்தது. இதையடுத்து, போலீசாரின் முயற்சியால் கோவிலில் நடக்கவிருந்த சேவல் பலியிடும் நிகழ்வு தடுத்து நிறுத்தப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.