விக்டோரியா ஆஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 இந்தியர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நேற்று ஆஸ்திரேலிய நாட்டின் விக்டேரியா மாநிலம் பிலிப் தீவுக்கு வந்திருந்த ஒரு குழுவினர் கடற்கரையில் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்து கடலில் குளித்து மகிழ்ந்தனர். நேற்று பிற்பகல் 4 பேர் கடற்பகுதியில் உள்ள குகைகளுக்கு அருகே உள்ள தண்ணீரில் இறங்கினர். அவர்கள் ஆழமான பகுதியில் சிக்கியதால் வெளியே வர முடியாமல் நீரில் மூழ்கித் தத்தளித்தனர். அங்கு சர்பிங் செய்துகொண்டிருந்த உயிர்காக்கும் வீரர்கள் விரைந்து சென்று, […]
