2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் தேதி துவங்க இருக்கும் 17 வது ஐபிஎல் சீசனில் சாம்பியன் பட்டத்தை வென்றே ஆக வேண்டும் என்கின்ற அதிதீவிரத்துடன் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. இதற்காக குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக கோப்பையை வென்ற கேப்டன் ஹர்திக் பாண்டியாவையே டிரேடிங் முறையில் மும்பை இந்தியன்ஸ் பேசி அழைத்து வந்தது. அவர் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மற்றும் பேட்டிங்கில் பினிஷர் என்பதால், பல வகையில் மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவனில் அது தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.