ரோகித் சர்மா இடத்தை பிடிக்க போகும் 23 வயது இளைஞர்! ஓப்பனராக இறங்க வாய்ப்பு!

Rohit Sharma Retirement: ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு இந்திய அணி இங்கிலாந்துக்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி இந்த மாத இறுதியில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டார். இது ரசிகர்கள் மத்தியில் கவலையையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. புதிய கேப்டனை நியமிக்க பிசிசிஐ ஆலோசனை செய்து வந்த நிலையில் ரோகித் சர்மா ஓய்வையை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஜூன் 20ஆம் தேதி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.

மேலும் படிங்க: பாதியில் நின்ற பஞ்சாப் டெல்லி போட்டி ரிசல்ட் என்ன? பிசிசிஐ அந்தர் பல்டி!

ரோகித் சர்மாவிற்கு மாற்று யார்?

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா இடத்தில் சாய் சுதர்சனை விளையாட வைக்க பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த டாப் 5 வீரர்கள் பட்டியலில் சாய் சுதர்சனம் இடம்பெற்றுள்ளார். குஜராத் அணிக்காக ஓப்பனிங் வீரராக களம் இறங்கும் இவர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். இந்த ஆண்டு 11 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 509 ரன்களை குவித்துள்ளார். மேலும் குஜராத் அணியின் வெற்றிக்கு சாய் சுதர்சனம் ஒரு முக்கிய காரணம்.

இதனால் இவரை இந்திய டெஸ்ட் அணியின் ஓப்பனராக களமிறக்க பிசிசிஐ யோசித்து வருகிறது. கடந்த ஆண்டு இந்தியா ஏ அணியில் சாய் சுதர்சன் இடம் பெற்று இருந்தார். பார்டர் கவாஸ்கர் தொடருக்கு முன்பு நடைபெற்ற பயிற்சி போட்டியில் விளையாடியிருந்தார். ஆஸ்திரேலிய தொடரிலேயே இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேவ்தத் படிக்கல் விளையாடியிருந்தார். தற்போது ரோகித் சர்மா ஓய்வை அறிவித்துள்ள நிலையில் உடனடியாக ஒரு மாற்று வீரர் இந்திய அணிக்கு தேவைப்படுகிறது.  தேர்வாளர்களை சாய் சுதர்சன் அதிகம் கவர்ந்துள்ளதால் எஸ்எஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து சாய் சுதர்சன் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கேப்டனாக சுப்மான் கில்லை நியமிக்க பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. கேஎல் ராகுல், பும்ரா போன்ற சீனியர் வீரர்கள் அணியில் இருப்பினும் கில் மீது பிசிசிஐ அதிகம் நம்பிக்கை வைத்துள்ளது. ரஞ்சி தொடர்களிலும் சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடி வருகிறார். மேலும் சர்பராஸ்கான் மற்றும் நிதீஷ்குமார் ரெட்டி போன்ற இளைஞர்களுக்கும் இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. மறுபுறம் மற்றொரு சீனியர் வீரரான விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவிக்க போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இது இந்திய அணியின் ரசிகர்களை மேலும் கவலை அடைய செய்துள்ளது. இங்கிலாந்து போன்ற ஒரு நாட்டில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இல்லாமல் செல்வது நன்றாக இருக்காது என்று பிசிசிஐ விரும்புகிறது. இதனால் விராட் கோலியை எப்படியாவது விளையாட வைக்க தற்போது பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிங்க: டெஸ்ட் கிரிக்கெட்டில் கவாஸ்கர், சச்சின், விராட் கோலியால் முறியடிக்கப்படாத இந்திய பேட்ஸ்மேனின் சாதனை..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.