திருப்பதி: ஆந்திராவில் ஜெகன் ஆட்சியின் போது நடைபெற்ற மதுபான கொள்கை ஊழல் குறித்த விசாரணையில் ரூ.1000 கோடிக்கும் மேல் ஊழல் நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் சந்திரகிரி பேரவை தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவும், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் சிறப்பு அறங்காவலர் குழு உறுப்பினருமான செவிரெட்டி பாஸ்கர் ரெட்டியை ஆந்திர போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்தனர். இவர் இலங்கை தப்பிச்செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
இவ்வழக்கில் ஏற்கெனவே கைதான முக்கிய குற்றவாளியான கசிரெட்டி ராஜசேகர ரெட்டியிடமிருந்து சுமார் ரூ.300 கோடி வரை செவிரெட்டி பாஸ்கர் ரெட்டி பெற்றுள்ளார் என்பதும், அந்த பணத்தில் ரூ.5 கோடியை ஜெகன் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்பி யிடம் செவிரெட்டி வழங்கினார் என்றும் சிறப்பு விசாரணை குழு ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.