இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வரும் ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்று அமெரிக்க தினர் டிரம்ப் இரண்டு நாட்களுக்கு முன் எச்சரித்திருந்தார். இந்த நிலையில், இஸ்ரேலுடன் கைகோர்த்து ஈரான் மீது வான்வழி தாக்குதல் நடத்துவது தொடர்பாக முடிவெடுக்க இரண்டு வாரகாலம் அவகாசம் வேண்டியிருப்பதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் எட்டாவது நாளாக நீடித்து வரும் நிலையில், இருதரப்பும் பலமாக மோதிவருகின்றன. ஈரானுக்கு அமெரிக்க அதிபர் விடுத்த எச்சரிக்கையை அடுத்து கடந்த […]
