டப்ளின்,
பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளும் பெல்பாஸ்ட்டில் நடைபெற உள்ளன. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்த அயர்லாந்து 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அயர்லாந்து 1-0 என முன்னிலையில் இருந்தது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 168 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து 169 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய அயர்லாந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 171 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை அயர்லாந்து கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி நாளை நடக்கிறது.