பொதுக் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறை வகுக்க அனைத்துக் கட்சி கூட்டம்: நவ.6-ல் நடக்கிறது 

சென்னை: தேர்​தல் பிரச்​சா​ரக் கூட்​டங்​கள், பொதுக் கூட்​டங்​களுக்​கான வழி​காட்டு நெறி​முறை​களை வகுப்பது குறித்து ஆலோ​சிக்​கும் வகை​யில் மூத்த அமைச்​சர்​கள் தலை​மை​யில் நவ.6-ம் தேதி அனைத்​துக் கட்சி கூட்​டம் நடை​பெற உள்​ளது. இதில் பங்கேற்​கு​மாறு அரசி​யல் கட்​சிகளுக்கு தலை​மைச் செயலர் அழைப்பு விடுத்​துள்​ளார்.

கரூரில் கடந்த செப்​.27-ம் தேதிதவெக தலை​வர் விஜய் பங்கேற்ற பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசல் ஏற்​பட்டு 41 பேர் உயி​ரிழந்​தனர். 100-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இந்த சம்​பவம் நாடு முழு​வதும் பெரும் அதிர்ச்சியை ஏற்​படுத்​தி​யது. இதையடுத்​து, நிகழ்ச்சி ஏற்​பாட்​டாளர்​கள் மீது வழக்குப் பதிவு செய்​யப்​பட்​டது. இதன் தொடர்ச்சியாக உச்சநீதி​மன்​ற உத்தரவின்படி சிபிஐவிசா​ரணை நடந்து வருகிறது. இதனை உச்ச நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி தலை​மையிலானகுழு கண்​காணிக்கவும் உத்தரவிட்டது. அதன்​படி, தற்​போதுசிபிஐ விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது.

இதற்​கிடையே, அரசி​யல் கட்​சித் தலை​வர்​களின் ரோடு ஷோ நிகழ்​வு​கள், பிரச்​சா​ரக் கூட்​டங்​களுக்கு அனு​மதி வழங்​கு​வது தொடர்​பான வழி​காட்டு நெறிமுறைகளை 10 நா​களில் வகுத்து சமர்ப்​பிக்​கு​மாறு அரசுக்கு உயர் நீதி​மன்​றம் கடந்த 27-ம் தேதி உத்​தர​விட்​டது. இதன் அடிப்​படை​யில், பொதுக்​கூட்​டம், ரோடு ஷோக்​கள் நடத்​து​வதற்​கான வழிகாட்​டு​தல்​களை உரு​வாக்​க, முதல்​வர் ஸ்டா​லின் தலை​மை​யில் சில நாட்​களுக்கு முன் ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெற்​றது. இதன் தொடர்ச்​சி​யாக, அனைத்​துக் கட்சி கூட்​டத்​துக்கு அரசு ஏற்​பாடு செய்​துள்​ளது.

இதுகுறித்து அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழகத்​தில் தேர்​தல் பிரச்​சா​ரக் கூட்​டங்​கள், பொதுக் கூட்​டங்​கள் நடத்​து​வதற்கு வழி​காட்டு நெறி​முறை​களை வகுப்​பது தொடர்​பாக தேர்​தல் ஆணை​யத்​தால் அங்​கீகரிக்​கப்​பட்ட கட்​சிகள் மற்​றும் நாடாளு​மன்ற, சட்​டப்ேபரவை உறுப்​பினர்​களைக் கொண்ட கட்​சிகளின் பிர​தி​நி​தி​களு​டன் ஆலோ​சனைக் கூட்​டம் நடத்​தப்பட உள்​ளது.சென்னை தலை​மைச் செயல​கத்​தின் நாமக்​கல் கவிஞர் மாளிகை 10-வது தளத்​தில் மூத்த அமைச்​சர்​கள் தலை​மை​யில் நவ.6-ம் தேதி காலை 10.30 மணிக்கு இக்​கூட்​டம் நடை​பெறும். இதில் பங்​கேற்று கருத்​துகள், ஆலோ​சனை​களைத் தெரிவிக்​கு​மாறு கட்​சித் தலை​வர்​களுக்கு தலை​மைச் செயலர் நா.​முரு​கானந்​தம் கடிதம் அனுப்​பி​யுள்​ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.