ரூ.60 ஆயிரத்தை தவறுதலாக குப்பைத் தொட்டியில் போட்ட பழ வியாபாரி: மீட்டுக் கொடுத்த தொழிலாளர்கள்

அகமதாபாத்: குஜ​ராத் மாநிலம் ராஜ்கோட் நகர் பஜ்ரங்​வாடி​யிலுள்ள ராஜீவ் நகரைச் சேர்ந்​தவர் அல்​டாப் காத்​ரி. இவர் பழ வி​யா​பாரம் செய்து வரு​கிறார். அண்​மை​யில் வியா​பாரம் மூலம் வந்த ரூ.60 ஆயிரம் ரொக்​கத்தை பிளாஸ்​டிக் பையில் சுற்றி தனது வீட்​டில் வைத்​து​விட்டு தொழுகை செய்து கொண்​டிருந்​தார்.

இதையறி​யாமல் அவரது வயதான அத்​தை, பழைய பிளாஸ்​டிக் பை வீட்​டில் இருப்​ப​தைப் பார்த்து அதை குப்​பைத் தொட்​டி​யில் வீசி​விட்​டார். திரும்பி வந்து பார்த்​த​போது பை இல்​லாததைக் கண்டு பதறிய அல்​டாப், தனது அத்​தை​யிடம் விவரம் கேட்​டுள்​ளார். அப்​போது அவர் பையை குப்​பைத் தொட்​டி​யில் வீசிய கதையை கூறி​யுள்​ளார். இந்​நிலை​யில், தெரு​வில் குப்​பையை சுத்​தம் செய்ய வந்த தொழிலா​ளர்​கள் குப்​பையை லாரி​யில் போட்டு எடுத்​துச் சென்​று​விட்​டனர்.

இதையடுத்து ராஜ்கோட் மாநக​ராட்சி அதி​காரி​களைத் தொடர்​பு​கொண்ட அல்​டாப், அந்த லாரியை நிறுத்தி வைக்​கு​மாறு கூறி​யுள்​ளார். இதையடுத்து சம்பவ இடத்​துக்​குச் சென்று அந்த லாரியை கண்​டு​பிடித்து தொழிலா​ளர்​களின் உதவி​யுடன் குப்​பையை தரை​யில் கொட்டி பணத்தை மீட்​டுள்​ளார் அல்​டாப்.

இதுகுறித்து அவர் கூறும்​போது, “வீட்​டில் பையை காண​வில்லை என்ற விவரமறிந்து குப்பை அள்​ளும் மாநக​ராட்சி ஊழியர்​களை தொடர்​பு​கொண்​டேன். அவர்​கள் உடனடி​யாக சூப்​பர்​வைசரின் செல்​போன் நம்​பரைக் கொடுத்து பேசு​மாறு கூறினர். பின்​னர் அந்த லாரியை நிறுத்​தி, அதிலிருந்த குப்​பையை தனி​யாகக் கொட்டி பணத்​தைக் கண்​டு​பிடித்​தேன்.

இதற்​காக உதவிய அனைத்து மாநக​ராட்சி ஊழியர்​களுக்​கும் நன்​றி. பாடு​பட்டு சேர்த்த பணம் வீணாய் போகாது என்று உணர்ந்து கொண்​டேன்.
வேன் டிரைவர் சுக்​ராம் வசுனி​யா, உதவி​யாளர் திரு வனி​யா, சுற்​றுச்​சூழல் பொறி​யாளர் பிரஜேஷ் சோலங்கி ஆகியோரின் உதவி​யால்​தான் பணம் கிடைத்​தது. அவர்​களுக்கு எனது நன்​றி​’’ என்​றார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.