சட்ட விரோதமாக நுழைந்த வழக்கு மெகுல் சோக்சி மீதான குற்றச்சாட்டை ரத்து செய்தது டொமினிகா நீதிமன்றம்: இந்தியா அழைத்து வருவதில் சிக்கல்

புதுடெல்லி: வங்கி மோசடியில் குற்றம்சாட்டப்பட்ட வைர வியாபாரி மெகுல் சோக்சி, சட்ட விரோதமாக டொமினிகாவுக்குள் நுழைந்ததாக தொடரப்பட்ட வழக்கை அந்நாட்டு உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி கடன் வாங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில் வைர வியாபாரி நீரவ் மோடி, அவரது மாமா மெகுல் சோக்சி மீது சிபிஐ, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளன. இதற்கிடையே, கடந்த ஆண்டு மே மாதம் கரீபியன் தீவு நாடான டொமினிகாவுக்கு சட்ட விரோதமாக சென்றதாக … Read more

ஜார்க்கண்ட்டில் தேர்தல் பேரணி பாக். ஆதரவு கோஷம் 62 பேர் மீது வழக்கு

ஹசாரிபாக்: ஜார்கண்ட் மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தல் 4 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் இரண்டு கட்டத் தேர்தல்கள் முடிந்துள்ளன. 3ம் மற்றும் 4ம் கட்டத் தேர்தல்கள் நாளை மறுநாளும், 27ம் தேதி நடைபெறுகிறது.இந்நிலையில், 2ம் கட்டத் தேர்தலில் வெற்றி பெற்ற அமீனா காதூன் தனது ஆதரவாளர்களிடம் பர்கதா மண்டலத்துக்கு உட்பட்ட ஷிலாடி பகுதியில் இருந்து வெற்றி பேரணி நடத்தினார். இந்த பேரணியின் போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதன் … Read more

சார்தாம் யாத்திரையில் 57 பக்தர்கள் உயிரிழப்பு: மருத்துவ முகாம்கள் அதிகரிப்பு

டேராடூன்: சார்தாம் யாத்திரையில் இதுவரை 57 பேர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க, பயண பாதைகளில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட உள்ளன. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற புனித தலங்களான பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரியை உள்ளடக்கிய புனித யாத்திரை ‘சார்தாம்’ யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. இதில் கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்களின் நடை கடந்த 3ம் தேதி, கேதார்நாத் கோயில் நடை 8ம் தேதியும் திறக்கப்பட்டன. அதிகளவு பக்தர்கள் பதிவு செய்வதால் … Read more

குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: பைடன் உள்ளிட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை

புதுடெல்லி: ஜப்பானில் நாளை தொடங்கும் 2 நாள் குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் மோடி நேற்று புறப்பட்டு சென்றார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து, ‘குவாட்’ அமைப்பை உருவாக்கி உள்ளன. கடந்தாண்டு கொரோனா காரணமாக, இந்த அமைப்பின் முதல் உச்சி மாநாடு காணொலி மூலமாக நடைபெற்றது. இந்நிலையில், இந்த நாடுகளின் தலைவர்கள் நேரடியாகப் பங்கேற்கும் 2வது உச்சி மாநாடு, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளை தொடங்குகிறது. 2 நாட்கள் நடைபெறும் இந்த … Read more

பெட்ரோல், டீசல் வரி குறைப்பு மூலம் மக்களை முட்டாளாக்க வேண்டாம்: ராகுல் காந்தி கடும் தாக்கு

புதுடெல்லி: ‘பெட்ரோல்,டீசல்  விலை குறைப்பு குறித்த அறிவிப்பால் மக்களை முட்டாளாக்குவதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும்’ என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பெட்ரோல் விலை லிட்டருக்கு 110 ரூபாயையும், டீசல் விலை 100 ரூபாயையும் தாண்டி விற்பனையானதால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்தது. கடந்த 45 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து நேற்று முன்தினம் ஒன்றிய அரசு அறிவித்தது. இந்த வரிக்குறைப்பு … Read more

தெரு நாய்கள் துரத்தியதால் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் பலி

ஹோஷியார்பூர்: பஞ்சாப் மாநிலம், பைரம்பூர் அருகே கியாலா புலந்தா கிராமத்தில் உள்ள ஒரு வயலில் 6 வயது சிறுவன், ரித்திக் ரோஷன் நேற்று விளையாடி கொண்டிருந்தான். அப்போது, சில தெருநாய்கள் அவனை துரத்தின. இதனால், பயந்துபோன ரித்திக் ரோஷன், நாய்களிடம் இருந்து தப்பிக்க ஓடிய போது அங்கு திறந்தவெளியில் இருந்த 100 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். தகவலறிந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு, மருத்துவ குழுவினர் மற்றும் அரசு அதிகாரிகள், சிறுவனை மீட்க முயன்றனர். … Read more

வெப்பச்சலனத்தால் மதுரை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: வெப்பச்சலனத்தால் மதுரை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது , மதுரை சிவகங்கை, புதுக்கோட்டை, உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.

சென்னை கோயம்பேடு வி.ஆர் மாலில் அனுமதியின்றி நடந்த மதுவிருந்து நடந்த தனியார் மதுபான கூடத்திற்கு காவல்துறை சீல் வைத்துள்ளனர்

சென்னை: சென்னை கோயம்பேடு வி.ஆர் மாலில் அனுமதியின்றி நடந்த மதுவிருந்து நடந்த தனியார் மதுபான கூடத்திற்கு காவல்துறை சீல் வைத்துள்ளனர். அனுமதியின்றி நடந்த மதுவிருந்தின்போது மயங்கி விழுந்து இளைஞர் உயிரிழந்ததை அடுத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மெட்ராஸ் காபி ஹவுஸ் வைப்பதற்கு அனுமதி வாங்கிவிட்டு மங்கி பார் நடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

மதுரை கொட்டாம்பட்டி அருகே 4 வழிச்சாலைகளில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 சகோதரர்கள் உயிரிழப்பு

மதுரை: மதுரை கொட்டாம்பட்டி அருகே 4 வழிச்சாலைகளில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 சகோதரர்கள் உயிரிழந்தனர். இருசக்கர வனகனத்தில் சென்று கொண்டிருந்த சகோதரர்கள் நீயாஷ் லுக்மான், இஜாஸ் முகம்மது ஆகியோர் உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனம் குறித்து கொட்டாம்பட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோயம்பேடு வி.ஆர் மாலில் அனுமதியின்றி மதுவிருந்து நடத்தியது தொடர்பாக 3 பேர் கைது

சென்னை: கோயம்பேடு வி.ஆர் மாலில் அனுமதியின்றி மதுவிருந்து  நடத்தியது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். மதுபானக்கூட மேலாளர்கள் நிகாஷ், பாரதி ஊழியர் எட்வின் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அனுமதியின்றி நடந்த மதுவிருந்தில் பங்கேற்ற இளைஞர் பிரவின் மயங்கி விழுந்து உயிரிழந்ததை அடுத்து 3பேரும் கைது செய்யப்பட்டனர்