வெற்றிலை, சூலத்துடன் தனியார் நிறுவனத்தில் பூஜை செய்து 100 பவுன் நகை, பணம் கொள்ளை : கொல்லம் அருகே பரபரப்பு
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே பத்தனாபுரத்தில் மது, சூலம், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை வைத்து பூஜை நடத்தி தனியார் நிறுவனத்தில் 100 பவுன் நகை மற்றும் ₹ 4 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பத்தனாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் நாயர். அங்குள்ள ஜனதா சந்திப்பு பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். 6 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சனிக்கிழமை பிற்பகலுக்கு பிறகு இந்த … Read more