தேசத் துரோக சட்டத்தின் கீழ் வழக்கு போடுவதை நிறுத்தி வைக்க முடியுமா? ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: ‘தேசத் துரோக சட்டப் பிரிவுகளை மறுபரிசீலனை செய்ய அவகாசம் வேண்டும் என்றால், அதுவரையில் தற்காலிகமாக சட்டத்தை நிறுத்தி வைக்க முடியுமா?’ என ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பிள்ளது. இந்திய தண்டனை சட்டம் 124ஏ சட்டப்பிரிவு தேசத் துரோக வழக்குகளை பதிவு செய்ய வழிவகுக்கிறது. இது அரசுகளால் தவறாகவும், பழிவாங்கும் நடவடிக்கையாகவும் பயன்படுத்தப்படுவதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. முதலில் சட்டத்தை ரத்து செய்ய முடியாது எனக் கூறிய ஒன்றிய அரசு, பின்னர் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,279,789 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.79 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,279,789 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 518,293,810 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 472,366,026 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 39,537 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சோதனை முறையில் அறிமுகம் குழந்தைகள் பயணிக்க ரயிலில் ‘பேபி பெர்த்’

புதுடெல்லி: சிறு குழந்தைகளை தாய்மார்கள் ரயிலில் அழைத்துச் செல்லும் போது, மிகுந்த அசவுகரியங்களை சந்திக்கின்றனர். அவர்களின் வசதிக்காக தற்போது ‘பேபி பெர்த்’ எனும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கீழ் படுக்கையில் (லோயர் பெர்த்) குழந்தைகளை படுக்க வைக்க வசதியாக பேபி பெர்த் அமைக்கப்பட்டுள்ளது. இது 770 மிமீ நீளத்திலும் 255 மிமீ அகலத்திலும் பொருத்தப்பட்டுள்ளது. பெர்த்தின் ஓரப்பகுதியில் இரும்பு கம்பி அமைக்கப்பட்டுள்ளதால், கீழ் படுக்கையில் தாய்மார்கள் தங்களின் அருகிலேயே குழந்தையை பத்திரமாக படுக்க வைத்துக் கொள்ள முடியும். … Read more

பிளஸ் 2 பாஸ் போதும் டிரோன் பைலட் ஆகலாம் மாதம் ரூ.30,000 சம்பளம்

புதுடெல்லி: ‘பிளஸ் 2 தேர்ச்சி தகுதி, டிரேன் பைலட் வேலை, ஒரு லட்சம் பேருக்கு மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம்’ என விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா கூறி உள்ளார். நிதி ஆயோக் நிகழ்ச்சியில் பேசிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா கூறியதாவது: ஆளில்லா விமானங்களான டிரோன் துறையை 3 சக்கரங்களுக்கு நாங்கள் முன்னோக்கி கொண்டு செல்ல உள்ளோம். முதலில், இதற்கான கொள்கை வகுப்பது. இந்த கொள்கையை எவ்வளவு வேகமாக நாங்கள் … Read more

வெளிநாட்டு நன்கொடை முறைகேடு சென்னை, கோவை உட்பட 40 இடங்களில் சிபிஐ ரெய்டு: ஒன்றிய உள்துறை அதிகாரிகளும் உடந்தை

புதுடெல்லி: வெளிநாட்டு நன்கொடை பெறுவதில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சென்னை, கோவை உட்பட நாடு முழுவதும் 40 இடங்களில் சிபிஐ நேற்று ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தியது. இந்தியாவை சேர்ந்த நூற்றுக்கணக்கான தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுகின்றன. இதில் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன. ‘வௌிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டம் – 2010’ன் கீழ், இந்த முறைகேடுகளை தடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நன்கொடையை பெறுவதற்கு ஒன்றிய உள்துறை … Read more

அடுத்தடுத்து தீவிரவாதிகள் சிக்கி வரும் நிலையில் பஞ்சாப் உளவுத்துறை தலைமை அலுவலகம் மீது குண்டு வீச்சு: காலிஸ்தான் ஆதரவாளர்கள் கைவரிசை

மொகாலி: பஞ்சாப், அரியானாவில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து பயங்கர ஆயுதங்களுடன் தீவிரவாதிகள் சிக்கிவரும் நிலையில், பஞ்சாப் மாநில உளவுத்துறை தலைமையகம் மீது ராக்கெட் கையெறி குண்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போலீசாருக்கு சவால் விடும் வகையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலின் பின்னணியில், காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. பஞ்சாப்  மாநிலம், மொகாலி அடுத்த சோஹ்னாவில் உளவுத்துறை புலனாய்வு அலுவலகத்தின் தலைமையகம் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு 7.45 மணிக்கு உயர் பாதுகாப்பு … Read more

அயோத்தியில் லதா மங்கேஷ்கர் பெயரில் சாலை: உ.பி முதல்வர் அறிவிப்பு

லக்னோ: இந்தியாவின் இசைக்குயில் பழம்பெரும் பாடகியும், பாரத ரத்னா விருது பெற்றவருமான லதா மங்கேஷ்கர் (92), கடந்த பிப்ரவரி மாதம் காலமானார். தற்போது அவரது நினைவாக அயோத்தியில் புதிய குறுக்குச்சாலை அமைக்கப்பட்டு, அவரது நினைவைப் போற்றும் வகையில் அந்த சாலைக்கு அவரது பெயர் சூட்டப்படுகிறது. இதற்கான உத்தரவை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிறப்பித்துள்ளார். இதற்கான முன்மொழிவை 15 நாட்களுக்குள் அரசுக்கு அனுப்பி வைக்கும்படி  அயோத்தி நகராட்சிக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமித்ஷா குடித்த வாட்டர் பாட்டில் 850 ரூபாயாம்…

பானாஜி: கோவாவில் பாஜ ஆட்சி நடக்கிறது. இதில், இம்மாநில முன்னாள் முதல்வரான ரவி நாய்க், தற்போது வேளாண் அமைச்சராக இருக்கிறது. இம்மாநிலத்தில் கடந்த பிப்ரவரியில் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. இதில், பாஜ வேட்பாளர்களை ஆதரித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரசாரம் செய்தார். அப்போது நடந்த ஒரு சம்பவத்தை நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ரவி நாயக் தெரிவித்தார். ‘பனாஜிக்கு பிரசாரம் செய்ய வந்த அமித்ஷா, குடிப்பதற்கு ஹிமாலயா கம்பெனி மினரல் வாட்டர் பாட்டில் கேட்டார். அது … Read more

திருப்பதியில் பத்மாவதி பரிணய உற்சவம் தொடக்கம்

திருமலை:திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ள நாராயணகிரி பூங்காவில் பத்மாவதி- சீனிவாச பரிணயம் எனப்படும் திருக்கல்யாண உற்சவம்  தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெற உள்ள உற்சவத்தில் முதல் நாளான நேற்று மலையப்ப சுவாமி வாகன மண்டபத்திலிருந்து அலங்கரிக்கப்பட்ட தங்க யானை வாகனத்தில் மாடவீதி வழியாக ஊர்வலமாக சென்று நாராயணகிரி பூங்காவை வந்தடைந்தார். உடன் தேவி, பூதேவி உற்சவ மூர்த்திகள் தங்கப் பல்லக்கில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். இதையடுத்து, பூங்காவில் மணப்பெண்களை பார்த்து பெருமாள் முதலில் மாலை மாற்றினார். பின்னர் … Read more

இலங்கையில் மக்கள் அமைதி காக்குமாறும், வன்முறையை நிறுத்துமாறும் அதிபர் கோத்தபய ராஜபக்சே வேண்டுகோள்

கொழும்பு: இலங்கையில் மக்கள் அமைதி காக்குமாறும், வன்முறையை நிறுத்துமாறும் அதிபர் கோத்தபய ராஜபக்சே வேண்டுகோள் விடுத்துள்ளார். பொருளாதார நெருக்கடியை தீர்க்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் எனவும், ஒருமித்த கருத்து மூலம் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.