லாலு உடல் நிலை: டாக்டர்கள் தகவல்

ஐந்தாவது ஊழல் வழக்கில் குற்றவாளி என, கடந்த, 15ம் தேதி நீதிமன்றம் அறிவித்த பின், லாலு பிரசாத், ராஞ்சி மத்திய சிறையில் அடைக்கப் பட்டார். பின், உடல் நிலை பாதிப்பு காரணமாக, ராஞ்சியில் உள்ள ஆர்.ஐ.எம்.எஸ்., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், மருத்துவமனையில் இருந்தபடியே, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வழியாக லாலு ஆஜர்படுத்தப்பட்டார். லாலுவின் உடல் நிலை பற்றி டாக்டர்கள் கூறியதாவது:லாலுவின் உடல் நிலை மோசமாக இருந்தாலும், நிலையாக உள்ளது. அவரது உடலில் சர்க்கரை அளவும், ரத்த அழுத்தமும் ஏற்றம், … Read more

பிக்பாஸ் அல்டிமேட் – கமல்ஹாசன் பின்வாங்க காரணம் என்ன ?

உலக அளவில் புகழ் பெற்ற ரியாலிட்டி டிவி நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் டிவியில் கடந்த ஐந்து சீசன்களாக நடைபெற்று முடிந்தது. தமிழில் நடிகர் கமல்ஹாசன் கடந்த ஐந்து சீசன்களையும் தொகுத்து வழங்கினார். ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகி வந்த நிலையில் அவருக்குக் கொரானோ தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டார். உடல் நலம் தேறிய பின் மீண்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அந்த சீசனை நடத்தி முடித்தார். டிவியில் நிகழ்ச்சி முடிந்ததும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் … Read more

ரஷ்ய அதிபருடன் பேச்சு? நிபந்தனை விதித்த பைடன்

வாஷிங்டன் : “உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்காவிட்டால், ரஷ்ய அதிபரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்துப் பேசுவார்,” என, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாக்கி தெரிவித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது போர் தொடுக்கும் நோக்கத்துடன், அதன் எல்லையில், 1.50 லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களை, ரஷ்யா நிறுத்தி உள்ளது. இதற்கு, அமெரிக்காவும், இதர ஐரோப்பிய நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உக்ரைனுக்கு ஆதரவாக ராணுவ வீரர்கள், போர் விமானங்கள் … Read more

சண்டையை விலக்கி விட சென்ற இருவர் கொலை| Dinamalar

ஷிவமொகா : சண்டையை விலக்கி விட சென்ற இரண்டு நண்பர்களை, நண்பர்களே கொலை செய்த அதிர்ச்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷிவமொகாவின் சூளேபைலு கிராமத்தை சேர்ந்தவர்கள் சலீம், 22, அப்துல், 23. இவர்களின் நண்பர் திப்பு, 22. நேற்று முன் தினம் நள்ளிரவு, ஏதோ காரணத்தால் திப்பு, தன் வீட்டில் சண்டை போட்டார். இதையறிந்து அங்கு சென்ற நண்பர்கள் இருவரும் புத்திமதி கூறி, சண்டையை விலக்கி விட முயற்சித்தனார். தன் வீட்டு விஷயத்தில், இவர்கள் தலையிட்டதால் கோபமடைந்த திப்பு, … Read more

பெற்றோரிடம் ஆதாரம் காட்ட ஷ்ரத்தா ஸ்ரீநாத் செய்த காரியம்

மலையாளத்தில் மோகன்லால் நடித்துள்ள ஆராட்டு திரைப்படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். இது மலையாளத்தில் இவர் நடிக்கும் இரண்டாவது படம். இந்த படத்தில் ஆர்டிஓ அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பில் மோகன்லால் மற்றும் உடன் நடித்த நடிகர்கள் சித்திக், நந்து, ரக்ஷனா உள்ளிட்ட பலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். அதற்கு அடுத்து அவர் பதிவிட்டுள்ள செய்திதான் ஹைலைட்டான விஷயமே. அதாவது பொதுவாக … Read more

திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு பிரியங்கா

விஜய் டிவி முன்னணி தொகுப்பாளினியாக வலம் வருபவர் பிரியங்கா. சமீபத்தில் நடைபெற்று முடிந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தார். பிரியங்கா எந்த விஷயம் செய்தாலும் அதில் நகைச்சுவை வெளிப்படும்படி செய்வதில் வல்லவர். அந்தவகையில் 96 படத்தில் திரிஷா நடித்த ஜானு கதாபாத்திர கெட்டப்பில் அதேபோன்ற ஒரு உடையை அணிந்து கொண்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் பிரியங்கா. இந்த படத்தை பார்த்துவிட்டு நடிகை திரிஷா, என சிரிப்பை வெளிபடுத்தி நன்றாக இருக்கிறது என … Read more

கடற்படை அணிவகுப்பு; ஜனாதிபதி பார்வை| Dinamalar

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் கிழக்கு கடற்படை கட்டளையின் 12வது அணிவகுப்பு நிகழ்ச்சி இன்று (பிப்.,21) காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார். ஐஎன்எஸ் சுமித்ரா கப்பலில் பயணித்தபடி, கடற்படை வீரர்களின் மரியாதையை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி அணிவகுப்பை பார்வையிட்டார். அவருடன், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இருந்தார். இந்த அணிவகுப்பில், கடற்படையின் 60 கப்பல்கள், 55 விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் பங்கேற்றன. விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் கிழக்கு கடற்படை கட்டளையின் … Read more

மலர் டீச்சராக நடித்திருக்க கூடாது : வருத்தப்பட்ட சுருதிஹாசன்

கடந்த 7 வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் பிரேமம். அந்த படத்தில் அறிமுகமான மூன்று கதாநாயகிகளில் மலர் டீச்சர் கதாபாத்திரமும் அதில் நடித்த சாய்பல்லவியும் ரசிகர்களிடம் ரொம்பவே பிரபலம் ஆனார்கள். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அதனை தெலுங்கில் நாகசைதன்யா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் ரீமேக் செய்தனர். அந்த சமயத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ருதிஹாசனை சோசியல் மீடியாவில் பலரும் ட்ரோல் செய்தனர் அந்த கதாபாத்திரத்திற்கு அவர் சரியான தேர்வு அல்ல … Read more