கடற்படை அணிவகுப்பு; ஜனாதிபதி பார்வை| Dinamalar

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் கிழக்கு கடற்படை கட்டளையின் 12வது அணிவகுப்பு நிகழ்ச்சி இன்று (பிப்.,21) காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார். ஐஎன்எஸ் சுமித்ரா கப்பலில் பயணித்தபடி, கடற்படை வீரர்களின் மரியாதையை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி அணிவகுப்பை பார்வையிட்டார். அவருடன், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இருந்தார். இந்த அணிவகுப்பில், கடற்படையின் 60 கப்பல்கள், 55 விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் பங்கேற்றன.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.