எல்.ஐ.சி., பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரி மத்திய அரசு விண்ணப்பம்| Dinamalar

புதுடில்லி-நாட்டின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., நிறுவனத்தில், 5 சதவீத பங்குகளை விற்பதற்கான புதிய பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரி, ‘செபி’ எனப்படும் பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பிடம், மத்திய அரசு வரைவு விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளது. எல்.ஐ.சி., நிறுவனத்தில் உள்ள தன் பங்குகளை விற்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை, பங்கு வெளியீடு மூலமாக திரட்டுவதற்கான நடவடிக்கைகள் நடந்து வந்தன. இதற்கு, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., எனப்படும் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் சமீபத்தில் … Read more

நடிப்பில் மகான் அப்பா..: மனம் திறக்கும் துருவ் விக்ரம்

ஆட்டம் காட்டும் அந்நியன், அரவணைக்கும் அம்பி, அசத்தும் ரெமோ என கேரக்டர்களாகவே மாறி, 'என்ன நடிப்புய்யா சும்மா பட்டைய கிளப்புறாருய்யா' என ரசிகர்களை ஆரவாரமாக ஆட்டம் போட வைக்கும் விக்ரம் உடன் 'மகான்' படத்தில் நடித்த அவரது மகன் துருவ் விக்ரம் மனம் திறக்கிறார்….மகான் படம் பற்றி‛மகான்' படத்தில் அப்பா விக்ரம் 'காந்தி மகான்' என்ற கேரக்டரில் வருகிறார். அது சிறு வயது முதல் 65 வயது வரை போகும். அவர் சந்திக்கும் பிரச்னைகள் என்ன என்பது … Read more

கேள்வி கேட்கும் வாக்காளர்களால் வேட்பளர்கள்…: திணறல்!: பிரசாரத்தில் விழி பிதுங்கும் அரசியல் கட்சிகள்; நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் விறுவிறுப்பு

அரசியலுக்கு பயன்படுத்தப்படுமோ என மாநிலங்கள் தயக்கம்| Dinamalar

புதுடில்லி : ‘ஆயுஷ்மான் பாரத்’ எனப்படும், பிரதமர் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கான பயனாளிகளை அடையாளம் காண்பதற்காக, உணவு பாதுகாப்பு திட்டத்தின்கீழ் பதிவு செய்துள்ள ரேஷன் கார்டு விபரங்கள் மற்றும் பயனாளிகளின் ஆதார் விபரங்களை மத்திய அரசு கோரியுள்ளது. ‘நிடி ஆயோக்’ ‘அரசியல் லாபத்துக்காக மத்திய அரசு அதை பயன்படுத்தலாம்’ என, அச்சப்படும் பெரும்பாலான மாநில அரசுகள், அந்த தகவல்களை தர மறுத்துள்ளன.நாடு முழுதும் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்களுக்கு இலவச ரேஷன் … Read more

காதலனை கரம்பிடித்த சாம்பவி

சின்னத்திரை நடிகையான சாம்பவி தெலுங்கில் தற்போது சாதனா என்ற தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சாம்பவி தமிழ் மற்றும் தெலுங்கு சீரியல் உலகில் மிகவும் பிரபலமானவர். சமீபத்தில் புது சீரியலில் இவர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இவர்களது திருமணம் இன்று கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. சாம்பவி தனது நீண்ட நாள் காதலரான பிரசன்னா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. தாமரை, கண்மணி ஆகிய … Read more

கனடா – அமெரிக்க எல்லையில் போராட்டத்தால் பதற்றம்

விண்ட்சர்:கனடா – அமெரிக்காவை இணைக்கும் பகுதியில் போராட்டக்காரர்கள் குவிந்ததால், பதற்றமான சூழல் நிலவுகிறது.வட அமெரிக்க நாடான கனடாவில், 31 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 35 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். எதிர்ப்பு வைரஸ் பரவலை தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொது இடங்களில் கூடும் மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.லாரி டிரைவர்கள் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை செலுத்தி இருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாத டிரைவர்கள் … Read more

மாஜி அதிகாரிக்கு ரூ.3 கோடி அபராதம்| Dinamalar

மும்பை:என்.எஸ்.இ., எனப்படும், தேசிய பங்கு சந்தையின் முக்கிய பதவிக்கு அதிகாரியை நியமித்ததில் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல், முறைகேட்டில் ஈடுபட்டதற்காக, தேசிய பங்கு சந்தை மற்றும் அதன் முன்னாள் தலைமை செயல் அதிகாரிகள் இருவருக்கு, ‘செபி’ எனப்படும் பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு அபராதம் விதித்துள்ளது. விதிமுறைகள் மீறல் என்.எஸ்.இ., எனப்படும், தேசிய பங்கு சந்தையின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக ரவி நரேன் என்பவர் 1994 – 2013 வரை பதவி வகித்தார். இவருக்கு … Read more

ரீ எண்ட்ரி கொடுக்கும் சிந்து ஷ்யாம்!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் ஹிட் தொடர்களில் ஒன்று இதயத்தை திருடாதே. இதன் முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நவீன் மற்றும் ஹிமா பிந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் காதல், ஊடல், கூடல் என விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் தொடரில் புதிதாக வில்லி ஒருவர் வருகிறார். ராஜேஸ்வரி என்ற வில்லி கதாபாத்திரத்தில் பிரபல நடிகை சிந்து ஷ்யாம் நடிக்கவுள்ளார். சிந்து ஷ்யாம் முன்னதாக … Read more

இணையே… என் உயிர் துணையே! – இன்று காதலர் தினம்

காதல் என்று சொல்லும் போதே மனசெல்லாம் றெக்க கட்டி பறப்பது போல ஒரு உணர்வு தோன்றுகிறது. காதல் என்பது காற்றை போல. அதை உணரத்தான் முடியும். பார்க்க முடியாது. கன்னம் சுருங்க காதலியும், மீசை நரைத்திட காதலனும் வாழ்வின் கரைகளை காணும் வரை தொடர்வதுதான் காதல் என்கின்றனர் கவிஞர்கள். உடலுக்கு இதயம் எப்படி முக்கியமானதோ, அதே போல, வாழ்க்கைக்கு காதல் உயிர் போன்றதாக மதிக்கப்படுகிறது. ஜாதி, மதம், மொழி, இனம், நாடு, நிறத்தை கடந்து இதயங்கள் இணைவதுதான் … Read more

இரண்டு துக்க சம்பவங்கள்; நின்று போயின திருமணங்கள்| Dinamalar

ஷிவமொகா : இரண்டு வெவ்வேறு துக்க சம்பவங்களால், இரண்டு திருமணங்கள் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டன.மணமகளின் பாட்டி, மணமகனின் தந்தை இறந்ததால் இந்த முடிவுக்கு அந்தந்த குடும்பத்தினர் வந்தனர்.ஷிவமொகாவின் பத்ராவதி அருகே உள்ள, அந்தரகங்கே கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், நாராயணபுராவை சேர்ந்த வாலிபருக்கும், இன்று திருமணம் நடப்பதாக இருந்தது. அதற்காக, இரு வீட்டாரும் ஏற்பாடுகளை செய்து வந்தனர். ஆனால், 10ல் மணமகளின் பாட்டி இறந்து விட்டதால், திருமணம் தள்ளி வைக்கப்பட்டது. அதே போல, பத்ராவதி அருகே உள்ள உஜ்ஜனிபுராவை … Read more