ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிட தமாகா ஆதரவு – முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கத்தை நிறுத்த திட்டம்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட தமாகா ஆதரவு தெரிவித்துள்ளது. அத்தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கத்தை நிறுத்த அதிமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 31-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. பிப்.27-ம் தேதி வாக்குப்பதிவும் மார்ச் 2-ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. அத்தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. … Read more

சர்ச்சைக்குரிய திரைப்படங்களை மறு தணிக்கை செய்ய தனிக்குழு – இந்து துறவிகள் சார்பில் அறிவிப்பு

புதுடெல்லி: பாலிவுட்டின், ‘பதான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதில் தீபிகா படுகோனேவுடன் ஷாருக்கான் நடித்த பாடல் காட்சி சர்ச்சைக்குள்ளானது. இதில் காவிநிற உடையுடன் இடம்பெற்ற ஆபாச நடனக் காட்சியை தடை செய்ய வேண்டும் என இந்து அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தின. இதுபோல் இந்து மதத்திற்குஎதிராக திரைப்படங்களில் சர்ச்சைகாட்சிகள் இடம்பெறுவதாக அவ்வப்போது புகார் எழுகிறது. இந்நிலையில் உ.பி.யின் பிரயாக்ராஜில் பல்வேறு மடங்களின்துறவிகள் சார்பிலான தர்மசபைகூடியது. இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து ஜோதிஷ்வர் பீடத்தின் அதிபதி சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் நேற்று … Read more

கடலோர மாவட்டங்களில் இன்று மழை வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றின் வேகத்தில் மாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 21-ம் தேதி ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். நீலகிரி, … Read more

கடற்படையில் நீர்மூழ்கி கப்பல் வகிர் நாளை மறுநாள் சேர்ப்பு

புதுடெல்லி: ஐஎன்எஸ் வகிர் என்ற புதிய நீர் மூழ்கி கப்பல் நாளை மறுதினம் கடற்படையில் சேர்க்கப்பட உள்ளது. இந்திய கடற்படையில் தற்போது 150-க்கும் மேற்பட்ட போர்க் கப்பல்கள் உள்ளன. வரும் 2027-ம் ஆண்டுக்குள் போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த மத்திய பாதுகாப்புத் துறை இலக்குநிர்ணயித்திருக்கிறது. அதேபோல் கடற்படையில் 17 நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. இதில் 2 நீர்மூழ்கி கப்பல்கள் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் திறன் கொண்டவை. நாட்டின் பெரும்பாலான நீர்மூழ்கி கப்பல்கள் ரஷ்யா, ஜெர்மனி … Read more

‘தலைநிமிர்ந்த தமிழ்நாடு; தனித்துவமான பொன்னாடு’ – நாடாளுமன்ற தேர்தலுக்காக பிரச்சாரத்தை தொடங்கிய திமுக

சென்னை: நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஓராண்டுக்கும் மேல் இருக்கும் நிலையில், இப்போதே திட்டங்களை முன்னிறுத்தி சமூகவலைதளம் மற்றும் போஸ்டர் பிரச்சாரத்தை திமுக தொடங்கிவிட்டது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கும்மேல் உள்ள நிலையில், தற்போதே பிரதான அரசியல் கட்சிகள் தங்கள் அடிப்படை பணிகளை தொடங்கிவிட்டன. அனைத்து அரசியல் கட்சிகளும் முதல்கட்டமாக, ‘பூத் ஏஜென்ட்’களை நியமிக்கும் பணிகளை பெரும்பாலும் முடித்துவிட்டன. இதில் தமிழகத்தின் ஆளுங்கட்சியான திமுக, படித்தவர்கள், வழக்கறிஞர்கள், திறமைசாலிகளை தேர்வு செய்து பூத் ஏஜென்ட்களாக நியமித்துள்ளது. இதுதவிர, திராவிட … Read more

ம.பி.யில் கடத்தப்பட்டவர்களை மீட்க நிதி திரட்டும் கிராம மக்கள்

போபால்: மத்திய பிரதேசம் ஷியோபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ராம் ஸ்வரூப் யாதவ், பட்டு பாகேல் மற்றும் குடா பாகேல். இந்த மூன்று பேரையும் நான்கு நாட்களாக காணவில்லை. இந்த நிலையில், அவர்கள் மூவரும் அண்டை மாநிலமான ராஜஸ்தானில் இருந்து செயல்படும் கிரிமினல் கும்பலால் கடத்தப்பட்டது கிராம மக்களுக்கு அண்மையில் தெரியவந்தது. ரூ.15 லட்சம் பணம் கொடுத்தால்தான் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என கடத்தல்காரர்கள் மிரட்டியுள்ளனர். இதையடுத்து, அவர்களை மீட்கும் நடவடிக்கையாக கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து … Read more

குடியரசு தின கொடியேற்றுதலில் சாதிய பாகுபாடு இருக்கக் கூடாது – ஆட்சியர்கள் கண்காணிக்க தலைமைச் செயலர் அறிவுறுத்தல்

சென்னை: குடியரசு தினத்தன்று, சாதிய பாகுபாடு ஏதுமின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களைக் கொண்டு தேசியக் கொடி ஏற்றுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஒருசில கிராம ஊராட்சிகளில் சாதியப் பாகுபாடுகள் காரணமாக மக்களால் தேர்வு செய்யப்பட்ட தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றுவதில் பிரச்சினைகள் ஏற்படலாம் என்ற தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நான் எழுதிய கடிதத்தில், … Read more

6 காங்கிரஸ் அரசுகளை திருடிவிட்டது பாஜக – மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

பதான்கோட்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை யாத்திரை ஜம்மு காஷ்மீரை அடைந்துள்ளது. இந்த யாத்திரை நேற்று முன்தினம் பஞ்சாபில் நடைபெற்றபோது பதான்கோட் என்ற இடத்தில் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது: தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே பாஜகவின் குறிக்கோளாக உள்ளது. மக்கள் நலனுக்காக எதையும் சிந்திக்கவோ செயல்படுத்தவோ இல்லை. ஆறு காங்கிரஸ் அரசுகளை அவர்கள் திருடிவிட்டனர். எங் களுக்கு உத்தரவு வழங்கிய 6 மாநிலங்களை அவர்கள் … Read more

உயர்கல்வித் துறை சார்பில் ரூ.202 கோடியில் புதிய கட்டிடங்கள் – முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: உயர்கல்வித் துறை சார்பில் ரூ.202.08 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாகத் திறந்துவைத்தார். சென்னை மாநிலக் கல்லூரி, பாரதி மகளிர் கலைக் கல்லூரி, ராணிமேரி கல்லூரி, ஆர்.கே.நகர் அரசு கலை, அறிவியல் கல்லூரி, டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி, திருவள்ளுர் செவ்வாய்பேட்டை அரசு பாலிடெக்னிக், பொன்னேரி உலகநாத நாராயணசாமி, விழுப்புரம் அறிஞர் அண்ணா, செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரிகள், வேலூர் தந்தை பெரியார் அரசு தொழில்நுட்பக் கல்லூரி, … Read more

செகந்திராபாத் ஷாப்பிங் மால் தீ விபத்து – ட்ரோன் கேமரா மூலம் 3 உடல் கண்டுபிடிப்பு

செகந்திராபாத்: செகந்திராபாத் 5 அடுக்கு கொண்ட டெக்கான் மாலில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு திடீரென கீழ் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 20 மணி நேரம் கழித்துதான் தீ கட்டுக்குள் வந்தது. அதற்குள் அந்த 5 அடுக்குமாடி முழுவதும் தீயால் சேதமடைந்தது. கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் உள்ளது. இதையடுத்து சுற்றுப்புறத்தில் உள்ள வீடுகள், கடைகள், ஷாப்பிங் மால்கள் அனைத்தும் காலி செய்யப்பட்டுள்ளன. மேலும் கட்டிடம் எந்த … Read more