’நேருவின் இந்தியாவில் கிரிமினல் பின்னணி கொண்ட எம்.பி.க்கள் உள்ளனர்': சிங்கப்பூர் பிரதமர் கருத்தால் சர்ச்சை

நேருவின் இந்தியாவில் கிரிமினல் பின்னணி கொண்ட எம்.பி.க்கள் உள்ளனர் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். ஜனநாயகம் எப்படி செயல்பட வேண்டும் என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார். அவர் பேசியதாவது: பல நாடுகள் மிக உயர்ந்த கொள்கைகள், மதிப்பீடுகளின் அடிப்படையில் தான் தொடங்கப்பட்டன. ஆனால் நாளடைவில் அரசியலின் தன்மை மாறிவிடுகிறது. இப்போதுள்ள பல அரசியலமைப்புகள் அதனை தோற்றுவித்தவர்கள் கொள்கைக்கு … Read more

பொறியியல் மாணவர்களுக்கு மார்ச் 7 முதல் நேரடி வகுப்புகள்: செய்முறைத் தேர்வு ஜூன் 13-ல் தொடக்கம்

சென்னை: பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு மார்ச் 7-ம் தேதி நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள்இணையவழியில் நடந்து வருகின்றன. இறுதி ஆண்டு மாணவர்களுக்கு நேரடி செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொறியியல் மாணவர்களுக்கு இணையவழி செமஸ்டர் தேர்வுகள் முடிவடைந்ததும், 2, 3, 4-ம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் மார்ச் 7-ம் தேதி தொடங்கி ஜூன் … Read more

தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்துக்கு அனுமதியில்லை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்

புதுடெல்லி: தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்துக்கு ஒருபோதும் அனுமதி வழங்கமுடியாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்து கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் தேசிய பசுமைதீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் வன உயிரிபாதுகாப்பு அமைப்பிடம் உரியஅனுமதி பெற்ற பிறகு இத்திட் டத்தை செயல்படுத்தலாம் … Read more

சிரியாவில் ஐ.எஸ் – குர்து படையினர் மோதலில் 123 பேர் பலி

சிரியாவில் குர்து படைகளுக்கும், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே நடத்த மோதலில் 123 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து பிரிட்டனில் இயங்கும் போர் கண்காணிப்புக் குழு கூறும்போது, “குர்து கட்டுபாட்டில் உள்ள ஹசாகா நகரில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர்கள் உள்பட 3,500-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள குவேரன் சிறைச்சாலை மீது ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனால் குர்து படையினருக்கும், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு இடையே மோதல் வெடித்தது. இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. ஐ.எஸ் … Read more

11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் கடலோர பகுதிகளில் உள்ள 11 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 18-ம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக் … Read more

உ.பி.யில் திருமண விழாவில் சோகம்; இரும்பு வலை உடைந்ததால் கிணற்றில் விழுந்து பெண்கள், குழந்தைகள்: 13 பேர் உயிரிழப்பு

லக்னோ: உத்தரபிரதேசத்தில் திருமண விழாவின் போது கிணற்றில் மேல் போடப்பட்ட இரும்பு வலை உடைந்ததால் அதன் மீது அமர்ந்திருந்த பெண்கள், குழந்தைகள் 13 பேர் உயிரிழந்தனர். உத்தரபிரதேசத்தின் குஷிநகர் மாவட் டத்தில் உள்ள நெபுவா நவுராங்கியா என்ற கிராமத்தில் நேற்று ஒரு திருமண விழா நடந்தது. திருமணத்துக்கு முந்தைய ‘ஹல்டி’ எனும் சடங்கு நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு ஏராளமான உறவினர்களும் நண்பர்களும் வந்திருந்தனர். அங்கிருந்த பெரிய கிணறு ஒன்றின் மீது இரும்பு வலையுடன் … Read more

பிரேக்த்ரூ தொற்றால் உடலில் வலுவான ஆன்டிபாடி உருவாகிறது: ஆய்வில் தகவல்

கரோனாவுக்கு எதிராக இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டவர்களுக்கும் தொற்று ஏற்படுவதை பிரேக்த்ரூ தொற்று என மருத்துவ உலகில் கூறப்படுகிறது. ஆனால், இந்த பிரேக்த்ரூ தொற்று ஏற்படுபவர்களுக்கு உடலில் வலுவான ஆன்டிபாடி உருவாகிறது எனக் கூறுகிறது ஓர் ஆய்வறிக்கை. ஜர்னல் செல் என்ற மருத்துவ இதழில் இந்த ஆய்வறிக்கை பிரசுரமாகியுள்ளது. வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர்களே இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர். கரோனா ஒரிஜினல் வைரஸைவிட டெல்டா, ஒமைக்ரான் திரிபுகள் அதிகமான பரவும் தன்மையும், எதிர்ப்பாற்றலை மீறி தாக்கும் திறனும் … Read more

பிப்ரவரி 17: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 17) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,41,783 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 … Read more

இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு 30,757: கெடுபிடிகளை தளர்த்திக் கொள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுமதி

புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,757 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது நேற்றைவிட சற்றே அதிகம். தொற்றின் காரணமாக 541 பேர் உயிரிழந்துள்ளனர்.அன்றாட பாதிப்பு குறைந்துள்ளதால் மாநிலங்கள் கரோனா கெடுபிடிகளை தளர்த்திக் கொள்ள மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. கடந்த 24 மணி நேர நிலவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது: கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,757 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. * அன்றாட பரவல் (பாசிடிவிட்டி) விகிதம் … Read more

மைக்கில் தரக்குறைவாக திட்டிய அமெரிக்க அதிபர் பைடன்: 'கூலாக' கையாண்ட நிருபர்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது முன் இருந்த மைக் செயல்பாட்டில் இருப்பதை உணராமல் செய்தியாளரை தரக்குறைவான வார்த்தைகளில் விமர்சித்த சம்பவம், உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பைடன் பேசியவை இணையத்தில் வெளியாகி வைரல் செய்தியாகியுள்ளது. இந்நிலையில், அதிபர் தன்னை விமர்சித்த விஷயத்தை மிகுந்த நிதானத்துடன் கையாண்டு அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார் அந்தப் பத்திரிகை நிருபர். Biden: What a stupid son of a bitch pic.twitter.com/K8H74Vfv8m — Acyn (@Acyn) January … Read more