தமிழகத்தில் இருமொழி கொள்கையே தொடரும்: பள்ளிக் கல்வித்துறை விளக்கம்

சென்னை: பாடத்திட்டத்தில் 3-வது மொழி சேர்க்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தவறானது. தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை மட்டுமே தொடரும் என்று பள்ளிக்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் நீண்ட காலமாக இருமொழிக் கொள்கை அமலில் இருக்கிறது. இதை மாற்றி மும்மொழிக் கொள்கையை புகுத்தும் நடவடிக்கையை தமிழக அரசு மறைமுகமாக தொடங்கியுள்ளதாக வலைதளங்களில் செய்தி வெளியாகி உள்ளது. தமிழகத்தில் தாய்மொழியாகிய தமிழ், உலக இணைப்பு மொழியான ஆங்கிலம் … Read more

மகாராஷ்டிராவில் கைதான நவ்நீத் ராணா அவரது கணவர் ரவி ராணாவுக்கு 14 நாள் காவல்

மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் வீடு முன் ஹனுமன் சாலீசா என்ற மந்திரத்தை கூறப்போவதாக அறிவித்த பெண் எம்.பி. நவ்நீத் ராணா மற்றும் அவரது கணவர் ரவி ராணா ஆகியோர் 14 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கபட்டனர். மகாராஷ்டிராவில் அமராவதி தொகுதி சுயேச்சை பெண் எம்பி நவ்நீத் ராணா. இவரது கணவரும் பட்னேரா தொகுதி சுயேச்சை எம்எல்ஏவுமான ரவி ராணாவும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவோடு தேர்தலில் வெற்றி பெற்றவர்கள். சமீபகாலமாக பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். … Read more

புதுச்சேரி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்த மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு

சென்னை/புதுச்சேரி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் இருந்து தனி விமானத்தில் பீகாருக்கு புறப்பட்டு சென்றார். அங்கு, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு, நேற்று இரவு எல்லை பாதுகாப்பு படையின் தனி விமானத்தில் பீகாரில் இருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அமித்ஷாவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் எம்எல்ஏ, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர், அங்கிருந்து காரில் புறப்பட்டு ஆவடிக்கு சென்றார். வழிநெடுகிலும் தமிழக … Read more

ஜம்மு காஷ்மீரில் சூரிய சக்தி மின் நிலையம் உட்பட ரூ.20 ஆயிரம் கோடியில் புதிய திட்டங்கள்: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

பாலி (சம்பா): சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக ஜம்மு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு சூரிய சக்தி மின் நிலையம் உட்பட ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தேசிய பஞ்சாயத்து ராஜ் தின கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஜம்மு காஷ்மீர் சென்றார். கடந்த 2019-ம் ஆண்டு சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு … Read more

"சாதி மதத்தால் தமிழினத்தை பிளவுபடுத்தி வளர்ச்சியை தடுக்க பார்க்கிறார்கள்…நாம் பலியாகிவிடக் கூடாது" –  முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: நம்மைப் பிளவுபடுத்துவதன் மூலமாக, நமது வளர்ச்சியைத் தடுக்கப் பார்க்கிறார்கள். தமிழினம் அதற்குத் பலியாகிவிடக் கூடாது, அதற்குப் பின்னால் இருக்கும் சதியை உணர்ந்து தெளிந்து புரிந்து கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுகவின் சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில் சென்னை திருவான்மியூரில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட ரமலான் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: “அஸ்ஸலாமு அலைக்கும். இப்தார் நோன்பு திறக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் … Read more

முதல்வர் உரிய நடவடிக்கை எடுத்து வருவதால் மின்வெட்டு பிரச்சினை விரைவில் சரியாகும்: கே.எஸ்.அழகிரி

கும்பகோணம்: தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுத்து வருவதால் மின்வெட்டு பிரச்சினை விரைவில் சரியாகும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சாரங்கபாணி சன்னதி தெருவில் காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலக கட்டிட அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. கட்சியின் தஞ்சாவூர் வடக்கு மாவட்டத் தலைவர் டிஆர்.லோகநாதன் தலைமை வகித்தார். மேயர் க. சரவணன் வரவேற்றார். தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டிய பிறகு செய்தியாளர்களிடம் … Read more

ஸ்ரீவிஜயேந்திரரை விமர்சித்த நபரை கைது செய்ய வேண்டும் – தமிழ்நாடு பிராமண ஸமாஜம் வேண்டுகோள்

சென்னை: தமிழ்நாடு பிராமண ஸமாஜத்தின் மாநில தலைவர் நா.ஹரிஹரமுத்து ஐயர் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியா மட்டுமின்றி, உலக அளவில் உள்ள இந்துக்களின் ஆன்மிக குருவான காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை, சவுக்கு சங்கர் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியும், இழிவுபடுத்தியும் பதிவிட்டுள்ளதை தமிழ்நாடு பிராமண ஸமாஜம் வன்மையாக கண்டிக்கிறது. இதை ஏற்க இயலாது. எனவே, சவுக்கு சங்கர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, அவரை கைது செய்ய வேண்டும் … Read more

இலங்கை பொருளாதார நெருக்கடி | பிரதமர் மகிந்த ராஜபக்ச வீட்டை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம்

கொழும்பு: இலங்கையின் மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகக் கோரி ஆயிரக்கணக்கான மாணவர்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஆளும் அரசு பதவி விலக வேண்டும் எனக் கூறி மக்கள் பல்வேறு போரட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை0 ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகக்கோரி அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டக்காரர்களை தடுக்கும் விதமாக … Read more

புதுச்சேரியில் அமித் ஷா | அரவிந்தர் ஆசிரமத்தில் அஞ்சலி; பாரதி நினைவில்லத்தில் மரியாதை

புதுச்சேரி: புதுச்சேரி வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாரதி இல்லம் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். அரவிந்தர் ஆசிரமம் சென்று அஞ்சலி செலுத்தினார். அவரது வருகையால் நகரில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. புதுவைக்கு ஒரு நாள் சுற்றுப்பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று வந்தார். சென்னை ஆவடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுவை லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், … Read more

நூறு நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக மாற்ற பரிசீலிக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: மத்திய, மாநில அரசுகள் வகுக்கின்ற திட்டங்களை எல்லாம் திறம்பட தேவைக்கேற்ப ஒருங்கிணைத்து கடைக்கோடி மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பது அது உள்ளாட்சி அமைப்புகளால்தான் முடியும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் செங்காடு கிராமத்தில், தேசிய ஊராட்சிகள் தினத்தையொட்டி இன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். கூட்டத்தில் கலந்துகொண்ட பெண்களிடம் முதல்வர் கலந்துரையாடி, அவர்களது கருத்துகளைக் கேட்டறிந்தார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் … Read more