தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, ஈரோடு மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று (ஏப்.24) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது. … Read more

புதுச்சேரிக்கு அமித் ஷா வருகை | எதிர்க்கட்சிகள் கறுப்புக் கொடி போராட்டம்; திமுக புறக்கணிப்பு

புதுச்சேரி: அமித் ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள், அமைப்புகள் இணைந்து கறுப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டபோது போலீஸாருடன் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இப்போராட்டத்தில் திமுக பங்கேற்காமல் புறக்கணித்தது. இந்தி மொழி கட்டாய திணிப்பைக் கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்தும் எதிர்க்கட்சிகள் சார்பில் புதுவைக்கு வரும் அமித்ஷாவுக்கு கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தன. இன்று காலை மத்திய அமைச்சர் அமித் ஷா புதுவைக்கு வந்தார். அதேநேரத்தில் புதுவை சாரம் அவ்வை திடலில் மத்திய அமைச்சர் … Read more

'நீர் பராமரிப்பும், பாதுகாப்பும் மக்களின் சமூக, ஆன்மிகக் கடமை' – பிரதமர் மோடி

புதுடெல்லி: நீர் பராமரிப்பும், நீர் நிலைகளின் பாதுகாப்பும் மக்களின் சமூக, ஆன்மிகக் கடமை என்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். வேதங்கள் தொடங்கி, புராணங்கள் வரை, நீரை சேமிக்க குளங்கள், ஏரிகள் ஆகியவற்றை அனைத்து இடங்களிலும் ஏற்படுத்த வேண்டும் என்பதை மனிதர்களின் சமூக மற்றும் ஆன்மிகக் கடமை என்றே கூறப்பட்டிருக்கிறது. வால்மீகி ராமாயணத்தில் நீர் நிலைகளை இணைப்பதன் மீதும், நீர் பாதுகாப்பின் மீதும் சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று அவர் சுட்டிக் … Read more

தமிழகத்தில் கடந்த ஓராண்டாக கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளன: டிஜிபி சைலேந்திர பாபு

திருநெல்வேலி: தமிழகத்தில் கடந்த ஓராண்டாக கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளதாகவும், கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் கொலைக் குற்றங்கள் 80 குறைவு என்றும் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். திருநெல்வேலியை அடுத்த சுத்தமல்லி அருகே உள்ள பழவூரில் உச்சினி மாகாளி அம்மன் கோயில் கொடை விழா சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. சுத்தமல்லி காவல்துறை பெண் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசா (27) தலைமையிலான போலீஸார், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.பழவூர் பால்பண்ணைத் தெருவைச் சேர்ந்த முத்துசாமி மகன் … Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்குக: ஓபிஎஸ்

சென்னை: மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 31 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடாக, அதாவது மூன்று விழுக்காடு உயர்த்தி வழங்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக ஒருங்கிணைப்பாள்ர ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் உன்னதமான பணியினை மேற்கொள்ளும் தமிழக அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படி உயர்வை வழங்க … Read more

தமிழகத்தில் கரோனோ பரவல் அதிகரிப்பு எதிரொலி: மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் கடிதம்

சென்னை: நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கரோனோ பரவல் அதிகரிப்பு எதிரொலியைத் தொடர்ந்து தமிழகத்தில் உரிய நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். டெல்லி , ஹரியானா , உத்தரப் பிரசேதம் ஆகிய மாநிலங்களில் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தமட்டில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை என்றாலும் மற்ற மாநிலங்களில் அதிகரித்துவரும் கரோனா தொற்றை மனதில் கொண்டு தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை … Read more

தமிழகத்தின் எதிர்காலத்துக்கு கடுமையாக உழைக்கும் முதல்வர் ஸ்டாலினை மனதார பாராட்டுகிறேன்: தலைமை நீதிபதி என்.வி.ரமணா

சென்னை: தமிழகத்தின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு கடுமையாக உழைத்து வரும் முதல்வர் ஸ்டாலினை மனதார வாழ்த்துகிறேன் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று நடந்த விழாவில் பங்கேற்றவர்கள் பேசியதாவது: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா: ‘ஓர்ந்து கண்ணோடாது’ என தொடங்கும் திருக்குறள்படி நீதிமன்றங்கள் தங்கள் உரிமையை பாதுகாக்கும் என மக்கள் நம்புகின்றனர். உடனடி காபி, உடனடி நூடுல்ஸ் போல மக்கள் உடனடி நீதி பரிபாலனத்தை எதிர்பார்க்கின்றனர். ஆனால் நீதித் … Read more

வழக்கறிஞர்களுக்கான சேமநல நிதி ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: வழக்கறிஞர்களுக்கான சேமநல நிதி ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நிர்வாகப் பிரிவுக்கான 9 மாடிகள் கொண்ட கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா, நாமக்கல், சங்கராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்கள் திறப்பு விழா, நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் திறப்பு விழா, வணிக வழக்குகளுக்கான நீதிமன்ற திறப்பு விழா, கரோனா காலகட்டத்தில் உயிரிழந்த வழக்கறிஞர்களின் குடும்பங்களுக்கு சேமநல நிதி வழங்கும் … Read more

பஞ்சாப் மாநிலத்தில் 184 விஐபி.க்களுக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு ரத்து

சண்டிகர்: பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதல்வராக பகவந்த் மான் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், மாநிலத்தில் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சன்னி உட்பட 184 விஐபி.க்களுக்கு வழங்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு நேற்று வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதுகுறித்து, கூடுதல் டிஜிபி கடந்த 20-ம் தேதி அனுப்பியுள்ள கடிதத்தில், ‘‘முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏ.க்கள் உட்பட விஐபி.க்களுக்கு வழங்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது அவர்களுக்கு உள்ள … Read more

மின்தேவையை பூர்த்தி செய்ய 4.80 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்படும் – அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

சென்னை: சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் உள்ள மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம், மின் கட்டுப்பாட்டு மையம், 24 மணி நேர நுகர்வோர் மின் சேவை மையமான மின்னகம் ஆகியவற்றை மின் துறைஅமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று ஆய்வு செய்தார். பின்னர், அவர் கூறியதாவது: அனல் மின் நிலையங்களுக்கு ஒரு நாளுக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை. ஆனால், 47 முதல் 50 ஆயிரம் டன் வரை மட்டுமே வருகின்றன. வெளிநாடுகளில் நிலக்கரி விலை உயர்ந்துள்ளது. எனவே, … Read more