சீமை கருவேல மரங்களை அகற்ற இறுதிக் கொள்கை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கால அவகாசம்

சென்னை: தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான இறுதிக் கொள்கையை அறிவிக்க தமிழக அரசுக்கு இரு மாதங்கள் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் சீமை கருவேலமரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், சீமை கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டது. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதிகள் சதீஷ்குமார், பரதசக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணையில் உள்ளன. … Read more

இலங்கை, பாகிஸ்தான் வரிசையில் துருக்கி?- 20 ஆண்டுகளில் இல்லாத அளவு விலைவாசி கடும் உயர்வு

இஸ்தான்புல்: துருக்கியில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு ஆண்டு பணவீக்க விகிதம் 61.14 சதவீதம் உயர்ந்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். உலக அளவில் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கை, பாகிஸ்தான், வெனிசுலா உள்ளிட்ட நாடுகள் பட்டியலில் துருக்கியும் உள்ளது. அங்கு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு முன்பாகவே அங்கு பொருளாதார பாதிப்பு தொடங்கி விட்டது. விநியோகச் சங்கிலித் தடை, … Read more

ரூ.38,900-க்கு ஐபோன் 12 – ’எக்ஸ்சேஞ்ச் ’ சலுகை விலை அறிவிப்பு

இந்தியாவில் இயங்கி வரும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை ஐபோன்களுக்கு வழங்கி வருகின்றன. இந்நிலையில், ஐபோன் 12 உட்பட பல்வேறு போன்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது ஐ-ஸ்டோர். இது தொடர்பான அறிவிப்பு இந்தியாவுக்கான ஆப்பிள் விநியோகஸ்தர்களின் அதிகாரபூர்வ வலைதளத்தில் வெளிவந்துள்ளது. ஐபோன் 12 ஸ்டோரில் ரூ.38,900-க்கு சலுகை விலையில் கிடைக்கும் என சொல்லப்பட்டுள்ளது. அதாவது, வங்கித் தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் (பழசுக்கு புதுசு) ஆஃபரில் இந்த விலை தள்ளுபடி கிடைப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இந்தியாவில் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் … Read more

உ.பி.யில் யாதவர்கள் வாக்குகளைப் பிரிக்க பாஜக வியூகம்: அகிலேஷின் சித்தப்பா, சகோதரருக்கு குறி

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்சிங் யாதவை சமாளிக்க அவரது சித்தப்பா ஷிவ்பாலுக்கு குறி வைக்கிறது பாஜக. சமாஜ்வாதியில் போட்டியிட முடியாத மகன் ஷிவ்பாலின் மகன் ஆதித்யாசிங் யாதவிற்கும் இடைத்தேர்தலில் வாய்ப்பளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் பாஜக முதல்வரான யோகி ஆதித்யநாத்திற்கு வாழ்த்து கூற அவரது வீட்டிற்கு சென்றார் ஷிவ்பால்சிங் யாதவ். இந்த சந்திப்பின் போது உத்தரப் பிரதேச பாஜகவின் தலைவரும் கேபினேட் அமைச்சருமான ஸ்வந்திரதேவ்சிங்கும் உடன் இருந்தார். அப்போது, சமாஜ்வாதி … Read more

கடந்த நிதி ஆண்டில் ஏற்றுமதி வருவாய் 41,800 கோடி டாலர்: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: கடந்த நிதி ஆண்டில் (2021-22) இந்தியாவின் ஏற்றுமதி 41,800 கோடி டாலரை (ரூ.31.76 லட்சம் கோடி) எட்டியுள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். இது முந்தைய நிதி ஆண்டை விட 40 சதவீதம் அதிகமாகும். கரோனா பெருந்தொற்று காலத்துக்கு முந்தைய ஆண்டில் நடைபெற்ற ஏற்றுமதியைவிட 33 சதவீதம் அதிகம் என்று குறிப்பிட்டார். இன்ஜினீயரிங் பொருள் ஏற்றுமதி 11,100 கோடி டாலரை தொட் டுள்ளது. இதில் அமெரிக்காவுக்கு மட்டும் 1,600 … Read more

சிவசங்கர் பாபா பாலியல் வழக்கு: காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சிவசங்கர் பாபா தாக்கல் செய்த வழக்கில் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள்து. செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுசீல்ஹரி சர்வதேச உண்டு உறைவிடப் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட சிவ சங்கர் பாபா தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தன் மீதான வழக்குகளில் இரண்டு … Read more

எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு: உயர் நீதிமன்ற அறிக்கையை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையை, தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில், அறப்போர் இயக்கம் மற்றும் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணையைத் தொடர்ந்து நடத்த அனுமதியளித்து … Read more

பொருளாதார, வர்த்தகம் தொடர்பாக இந்தியா – ஆஸ்திரேலியா இடையே ஒப்பந்தம் கையெழுத்து: 96% இந்திய பொருளுக்கு சுங்க வரி ரத்து

இந்தியா, ஆஸ்திரேலியா இடையே பொருளாதார, வர்த்தகஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதியாகும் ஜவுளி, தோல், நகை உள்ளிட்ட 96% இந்திய பொருட்களுக்கு சுங்க வரி ரத்தாகிறது. பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் முன்னிலையில் காணொலி மூலம் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய-ஆஸ்திரேலிய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும்வர்த்தக ஒப்பந்தம் கையெழுத் தானது. இதில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர்பியூஷ் கோயல் மற்றும் ஆஸ்திரேலிய வர்த்தகம், சுற்றுலாத் துறைஅமைச்சர் தன் … Read more

‘‘உங்கள் கடன் வேண்டாம்’’- சீனாவை கண்டு அலறும்  நேபாளம்: அதிக வட்டியால் சிக்கிய இலங்கை, பாகிஸ்தான் பாடம் 

காத்மாண்டு: சீனாவிடம் அதிக வட்டிக்கு வாங்கிய கடன்களால் சிக்கிக் கொண்ட இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் தற்போது அரசியல் குழப்பமும் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் பெருந்தொகையை கடனாக தர சீனா முன்வந்த நிலையில் அதனை ஏற்க நேபாளம் மறுத்துள்ளது. மாலத்தீவு, வங்கதேசமும் சீன கடன்களை பெற அச்சம் தெரிவித்துள்ளன. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய … Read more

அமெரிக்காவில் பயங்கரம்: துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி; பலர் காயம்

கலிப்போர்னியா:அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 6 பேர் உயிரிழந்தனர், 12 பேர் காயமடைந்தனர். கலிபோர்னியா மாகாண தலைநகர் சேக்ரமென்டோவில் உள்ள முக்கியப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமையன்று திடீரென துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. இந்தத் துப்பாக்கிச் சூட்டை தனி நபர் நடத்தினரா? அல்லது ஒரு கும்பல் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதா என்று இதுவரை தெரியவில்லை. இந்த துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 6 பேர் பலியாகி உள்ளனர். 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் … Read more