’நான் ஓடி ஒளியவும் இல்லை, யாருக்கும் அஞ்சவும் இல்லை’ – வீடியோ வெளியிட்டு ஜெலன்ஸ்கி தகவல்

கீவ்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 13- வது நாளாக இன்றும் தொடர்ந்து வரும் நிலையில், “நான் ஓடி ஒளியவும் இல்லை, யாருக்கும் அஞ்சவும் இல்லை” எனத் தெரிவித்து தனது அலுவலகத்தில் இருந்து வீடியோ ஒன்றை உக்ரைன் அதிபர் வொலாடிமிர் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ளார். கடந்த மாதம் 24-ம் தேதி சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில், உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த தொடங்கியது. இந்தத் தாக்குதை உக்ரைன் அரசு, அந்நாட்டு மக்களின் துணையுடன் எதிர்கொண்டு வருகிறது. … Read more

ஜெயக்குமார் ஜாமீன் கோரிய மனு: காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் கோரிய மனு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை துரைப்பாக்கதில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மகேஷ் … Read more

கோவாவில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பாஜக தீவிரம்: பிரதமரை சந்திக்க டெல்லி சென்றார் சாவந்த்

பனாஜி: கோவாவில் தொங்கு சட்டப்பேரவை அமைய வாய்ப்புள்ளதாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ள நிலையில் அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க டெல்லி சென்றுள்ளார். உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் நேற்றுடன் நிறைவு பெற்றது. வரும் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த சூழலில் பல்வேறு முன்னணி ஊடகங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை நேற்று மாலை வெளியிட்டன. உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் … Read more

202 பள்ளிகள், 34 மருத்துவமனைகள், 1500 குடியிருப்புகள் சேதம்: ரஷ்ய ராணுவம் மீது உக்ரைன் குற்றச்சாட்டு

கீவ்: உக்ரைனில் இதுவரை 202 பள்ளிகள், 34 மருத்துவமனைகள், 1500 குடியிருப்புகளை ரஷ்ய ராணுவம் சேதப்படுத்தியுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதனை உக்ரைன் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கியும், அவரது ஆலோசகர் மிக்காலியோ போடோலியாக்கும் கூட்டாக அறிவித்தனர். உக்ரைனில் 900 குடியிருப்புகள் முழுமையாக தண்ணீர், மின்சாரம், ஹீட்டர்கள் இல்லாமல் முடக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். மிக்காலியோ தனது ட்விட்டரில், “21-ஆம் நூற்றாண்டின் காட்டுமிராண்டித்தனம் இது. ரஷ்ய தாக்குதலால் 202 பள்ளிகள், 34 மருத்துவமனைகள், 1500 குடியிருப்புகள் முற்றிலும் சேதமடைந்துவிட்டன. … Read more

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: பிற்பகலில் தண்டனை அறிவிப்பு

மதுரை: சேலம் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் ஆணவ படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்பட 10 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இவர்களுக்கான தண்டனை விவரங்கள் இன்று பிற்பகலில் அறிவிக்கப்படவுள்ளது. கோகுல்ராஜ் கொலை: சேலம் மாவட்டம் ஓமலூரைச் சோ்ந்த கல்லூரி மாணவா் கோகுல்ராஜ். இவா் கடந்த 2015-ம் ஆண்டில் நாமக்கல் மாவட்டம் தொட்டிப்பாளையத்தில் ரயில் தண்டவாளத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். வேறொரு சாதி பெண்ணை காதலித்ததால் கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை செய்யப்பட்டது … Read more

ஆந்திர சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடக்கம்; ஆளுநர் உரையை புறக்கணித்து தெலுங்கு தேசம் வெளிநடப்பு: தலைநகர் குறித்து அமைச்சர் பேச்சால் சர்ச்சை

அமராவதி: ஆந்திர சட்டப்பேரவையின் பட் ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. ஆளுநர் உரையைப் புறக்கணித்து தெலுங்கு தேசம் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். முன்னதாக 2024-ம் ஆண்டு வரை ஹைதராபாத் தான் ஆந்திராவின் தலைநகரமென நேற்று அமராவதியில் பேரவை கூட்டம் தொடங்குவதற்கு முன், நகராட்சி வளர்ச்சித் துறை அமைச்சர் பி. சத்தியநாராயணா கூறினார். இது தற்போது ஆந்திராவில் புதிய விவாதத்தை கிளப்பி உள்ளது. அமராவதியில் நேற்று ஆந்திர சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. முன்னதாக, துபாயிலிருந்து ஹைத … Read more

உக்ரைன் யுத்தக் களம் | ரஷ்ய ராணுவ வாகனங்களின் 'Z' குறியீட்டுக்கு அர்த்தம் என்ன?

உக்ரைன் படையெடுப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ரஷ்ய ராணுவ வாகனங்கள், போர் தளவாடங்களில் ‘Z’ என்ற எழுத்து இடம்பெறுள்ளது. இந்த எழுத்திற்கு என்ன அர்த்தம் என்ற வாதவிவாதங்கள் தற்போது எழுந்துள்ளன. ரஷ்ய தரப்பிலிருந்து இதற்கு நேரடியாக விளக்கம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் சமூக வலைதளங்களில் இந்த ‘Z’ குறையீடு பேசுபொருளாகியுள்ளது. ரஷ்யாவை ஆதரிக்கும் சிலரும் இந்தக் குறியீடு அடங்கிய டி ஷர்ட்டுகள் அணிந்து கொள்கின்றனர். ‘Z’ குறியீட்டுக்கு என்ன அர்த்தம்? ‘Z’ என்பதை சிலர் வெற்றிக் குறியீடு எனக் கூறுகின்றனர். … Read more

சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாட்டம்: ஆளுநர், முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: சர்வதேச மகளிர் தினம் இன்று (மார்ச் 8) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஆளுநர், முதல்வர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: ஆளுநர் ஆர்.என்.ரவி: நம் நாட்டில் ஆன்மிகம், அறிவுசார், சமூகம், அரசியல் களங்களில் ஆதிகாலம் முதலே பெண்களின் தலைமைத்துவம் இருந்துள்ளது நாம் அனைவரும் பெருமைப்படும் விஷயமாகும். அவ்வையார், வீர மங்கை வேலு நாச்சியார், ஜான்சி ராணி, டாக்டர் அன்னி பெசன்ட் மற்றும் இந்தியாவின் சுதந்திரத்துக்காகப் … Read more

உக்ரைனிலிருந்து சொந்தச் செலவில் நாடு திரும்பிய 255 தமிழக மாணவர்கள்: 30 தமிழர்கள் வரவிரும்பாமல் அங்கேயே தங்கினர்

புதுடெல்லி: உக்ரைனிலிருந்து தமது சொந்தச் செலவில் 255 தமிழக மாணவர்கள் வீடு திரும்பியுள்ளனர். மேலும் 30 தமிழர்கள் தமக்கு பிரச்சினை இல்லை எனக் கூறி உக்ரைனிலேயே தங்க விருப்பம் தெரிவித்துள்ளனர். கடந்த பிப்ரவரி 24 ல் உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கையைத் தொடங்வங்கியது . அதன்பின்னர் அங்கு சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க ‘ஆப்ரேஷன் கங்கா’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஆனால், இந்த ஆபரேஷனில் மீட்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. … Read more

13-வது நாளாக தொடரும் ரஷ்ய தாக்குதல்: இன்றாவது சாத்தியப்படுமா மனிதாபிமான வழித்தடம்; மக்கள் தவிப்பு

கீவ்: உக்ரைன் மீதான ரஷ்ய ராணுவ நடவடிக்கை இன்று 13வது நாளாக தொடர்கிறது. கீவ், கார்கிவ், சுமி, மரியுபோல் எனப் பல நகரங்களிலும் சிக்கியுள்ள மக்கள் உயிர் பிழைக்கவாவது எங்காவது தப்பிவிட மாட்டோமா என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். ஏற்கெனவே இரண்டு முறை அறிவிக்கப்பட்ட ரஷ்ய போர் நிறுத்த அறிவிப்பு செயல்பாட்டுக்கே வராத நிலையில், 3ஆம் கட்டப் பேச்சுவார்த்தையில் மனிதாபிமான வழித்தடங்கள் தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டதாகத் தெரிகிறது. இதனால், ரஷ்ய நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் போர் … Read more