'இஸ்லாத்தில் ஹிஜாப் அணிவது அவசியமான ஒன்று இல்லை' – உயர் நீதிமன்றத்தில் கர்நாடக அரசு வாதம்

பெங்களூரு: “இஸ்லாத்தில் ஹிஜாப் அணிவது அவசியமான மத நடைமுறை ஒன்றும் அல்ல. எனவே ஹிஜாப் அணிய விதித்த தடை, அரசியல் சாசன சட்டம் 25-ஐ மீறுகிறது என்ற வாதத்தை ஏற்க முடியாது” என்று கர்நாடக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு விதித்த தடையை எதிர்த்து உடுப்பி முஸ்லிம் மாணவிகள், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இவ்வழக்கு 6-வது நாளாக இன்று தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா … Read more

ஊடுருவுகிறது ரஷ்யா; உக்ரைனிலிருந்து வெளியேறுங்கள்: தூதரக அதிகாரிகளுக்கு அமெரிக்கா உத்தரவு

வாஷிங்டன்: உக்ரைன் எல்லையில் ரஷ்யா தமது படைகளை நிறுத்தியுள்ளதால், அங்குள்ள தங்கள் நாட்டு தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து இன்று அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், “உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா பல்லாயிரக்கணக்கான படைகளைக் குவித்து வருகிறது. எல்லையில் பீரங்கிகள், ஏவுகணைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. உக்ரைனில் ஊடுருவதற்கான முயற்சியில் ரஷ்யா உள்ளது. எனவே, உக்ரைனிலுள்ள அமெரிக்க பிரதிநிதிகள், தூதரக அதிகாரிகள், பொதுமக்கள் உக்ரைனிலிருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொள்கிறோம். இம்முடிவை தற்போதே பரிசீலியுங்கள்” என்று … Read more

பிப்ரவரி 18: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 18) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,42,929 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 … Read more

'அரசின் நிலைப்பாட்டை மக்கள் கேட்கட்டும்' – ஹிஜாப் விசாரணை நேரலையை நிறுத்த மறுத்த நீதிமன்றம்

பெங்களூரு: ஹிஜாப் தொடர்பான வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்ற விசாரணையை கடந்த 5 நாட்களாக ஒரு லட்சத்தில் இருந்து 5 லட்சம் பேர் வரை நேரலையில் பார்த்து வரும் நிலையில் நேரலையை நிறுத்த நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு விதித்த தடையை எதிர்த்து உடுப்பி முஸ்லிம் மாணவிகள், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இவ்வழக்கு 6-வது நாளாக இன்று தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீட்ஷித் … Read more

அபுதாபியை தாக்க வந்த இரு ஏவுகணைகளை அழித்தோம்: ஐக்கிய அரபு அமீரகம்

அபுதாபி: ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவிய இரு ஏவுகணைகளை பதிலடி தாக்குதலில் அழித்ததாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில், “தலைநகர் அபுதாபியை நோக்கி இன்று (திங்கட்கிழமை) ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் வீசிய இரு ஏவுகணைகளை எங்கள் ராணுவம் தாக்கி அழித்தது. ஐக்கிய அரபு அமீரகம் எந்தவிதமான அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளது. நாட்டை பாதுகாக்க அனைத்துவிதமான நடவடிக்கைகளை ஐக்கிய அரபு அமீரகம் எடுக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏமனில் இயங்கும் … Read more

கோவை சிறப்பு தேர்தல் பார்வையாளராக ஐஏஎஸ் அதிகாரி நாகராஜன் நியமனம்: மாநில தேர்தல் ஆணையர்

சென்னை: கோவை தேர்தல் சிறப்பு பார்வையாளராக, ஐஏஎஸ் அதிகாரி எஸ்.நாகராஜன் நியமிக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் கூறியுள்ளார். நாளை நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது: “தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னர் 31,030 வாக்குச்சாவடிகள் இருந்தன. இதில் அங்கீகரிக்கப்பட்ட … Read more

கோதாவரி – காவிரி இணைப்பு திட்டம்: தமிழகம் உட்பட 5 மாநிலங்களுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை

விஜயவாடா: கோதாவரி – காவிரி நதிநீர் இணைப்பு திட்டம் குறித்து தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட 5 மாநில அரசுகளுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்துகிறது. மகாராஷ்டிர மாநிலம் திம்பகேஷ்வரில் உற்பத்தியாகும் கோதாவரி நதி, கங்கைக்கு அடுத்தபடியாக நாட்டின் 2-வது நீளமான நதி ஆகும். இது தெலங்கானா, ஆந்திரா, சத்தீஸ்கர், ஒடிசா ஆகிய மாநிலங்களில் பாய்ந்து வங்கக் கடலில் கலக்கிறது. இந்த நதியில் ஆண்டுக்கு 247 டிஎம்சி நீர் வீணாக கடலில் கலப்பதாக கூறப்படுகிறது. இந்த உபரி … Read more

தடுப்பூசியா, தனிமனித சுதந்திரமா? – அமெரிக்காவில் தொடரும் விவாதம்

பள்ளியிலிருந்து குழந்தையை அழைத்து வரும்போதுதான் டேனியல்லா தோர்ன்டனுக்கு, தடுப்பூசி செலுத்தாத காரணத்தால் தனது 9 வருட வேலையை இழந்துவிட்ட தகவல் தெரியவந்துள்ளது. அமெரிக்க அதிபராக ஜோ பைடன் கடந்த வருடம் பதவியேற்றத்திலிருந்து கரோனாவை ஒழிப்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாகத்தான் அங்கு பணியிடங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்வது தொடர்ந்து அரசால் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பின்னணியில்தான் தற்போது டேனியல்லா 9 வருடங்களாக சிட்டி க்ரூப் வங்கியில் பார்த்த வேலையை இழந்திருக்கிறார். ஆனால், இந்த முடிவை … Read more

தமிழகத்தில் இன்று 1,146 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 262 பேருக்கு பாதிப்பு- 4,229 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 1,146 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,42,929. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,48,349 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 33,84,278. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் யாருக்கும் தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 81,68,040 பேர் வந்துள்ளனர். சென்னையில் 262 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை … Read more

தனியார் துறைகளில் 75% ஒதுக்கீடு; ஹரியாணா உயர் நீதிமன்ற தடைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

புதுடெல்லி: தனியார் நிறுவனங்களில் 75 சதவீத ஒதுக்கீடு அளிக்கும் விஷயத்தில் ஹரியாணா உயர் நீதிமன்ற உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க கடந்த2020-ம் ஆண்டு பாஜக மாநில அரசு சட்டம் கொண்டு வந்தது. அதன்படி, ஹரியாணாவைச் சேர்ந்தவர்களுக்கு 75 சதவீத வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்று தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டது. அத்துடன் குறைந்தபட்ச ஊதியமும் ரூ.30 ஆயிரம் அளவுக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதற்கான அரசாணையை எதிர்த்து, தனியார் … Read more