ரேஷன் பொருட்கள் இருப்பு, விலை, புகார் எண்களை அட்டைதாரர்கள் அறியும் வகையில் வைக்க உத்தரவு: உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் நடவடிக்கை

சென்னை: ரேஷன் கடைகளில் வேலைநேரம், பொருட்கள் இருப்பு, அளவு, விலை,புகார் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள் ஆகிய வற்றை குடும்ப அட்டைதாரர்கள் அறியும் வகையில் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் வெ.ராஜாராமன் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் அனுப்பிய சுற்றறிக்கை: பொது விநியோகத்திட்டத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகளில் அட்டைதாரர்கள் கவனத்துக்கு, தகவல்கள் அடங்கிய தகவல் பலகைகள் பராமரித்து வைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், … Read more

ம.பி.யில் விஎச்பி போராட்டத்தால் மாணவிகள் ஹிஜாப் அணிந்து அரசு கல்லூரிக்கு வர தடை

போபால்: ஹிஜாப் அணிந்து கல்லூரிக்குள் நுழைய மாணவிகளுக்கு தடைவிதிக்கப்பட்ட சம்பவம் மத்தியபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. கர்நாடகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பான வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே ம.பி.யில் உள்ள ஒரு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் தாட்டியா மாவட்டத்தில் அரசு கலைக் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரிக்கு கடந்த வாரம் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் … Read more

26/11, பதான்கோட், புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு பாக். தொடர்ந்து ஆதரவு: ஐ.நா. மாநாட்டில் இந்திய பிரதிநிதி குற்றச்சாட்டு

நியூயார்க்: மும்பை, பதான்கோட், புல்வாமா தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு பாகிஸ்தான் அரசு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாக ஐ.நா. மாநாட்டில் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. நியூயார்க்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐ.நா. தீவிரவாத எதிர்ப்புக் கமிட்டி மாநாட்டில், ஐ.நா.வுக்கான இந்தியத் தூதரின் ஆலோசகர் ராஜேஷ் பரிஹர் பேசியதாவது: 2008 மும்பை தாக்குதல் (26/11), 2016 பதான்கோட் தாக்குதல், 2019புல்வாமா தாக்குதல் போன்ற கொடூரமான தீவிரவாதத் தாக்குதல்களை இந்த உலகம் கண்டது. இந்தத் தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் … Read more

வாடகை பாக்கி செலுத்தாதவரின் சொத்துகளை ஜப்தி செய்து ஏலம் விட வேண்டும்: அதிகாரிகளுக்கு அறநிலையத் துறை உத்தரவு

சென்னை: கோயில் இடங்களுக்கான வாடகை பாக்கியை செலுத்தாதவர்களின் சொத்துகளை ஜப்தி செய்து ஏலம் விட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதா வது: நீண்ட காலமாக வாடகை பாக்கி செலுத்தாதவர்களை ஆக்கிரமிப்பாளர்களாக கருதி வெளியேற்றுவதால் வாடகை பாக்கியை அவர்களிடம் இருந்து திரும்ப பெற முடியாத நிலை உள்ளது. எனவே, நீண்ட காலமாக வாடகை பாக்கி செலுத்தாதவர்களை ஆக்கிரமிப்பாளர்களாக கருதி வெளியேற்றுவதுடன் அவர்களுடைய சொத்துகளை ஜப்தி செய்ய வேண்டும். … Read more

லாலு பிரசாத் குற்றவாளி: 5-வது கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தீர்ப்பு

ராஞ்சி: 5-வது கால்நடைத் தீவன ஊழல் வழக்கிலும் பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் குற்றவாளி என ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. பிஹார் முதல்வராக லாலு பிரசாத் பதவி வகித்த காலத்தில் கால்நடைகளுக்காக வாங்கப்பட்ட தீவனத்தில் பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ தரப்பில் 64 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் லாலு பிரசாத் மீது மட்டும் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்கை … Read more

வெள்ளை மாளிகைக்கு வந்த புது விருந்தாளி

அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு வில்லோ என்ற பூனை புதிதாக வருகை புரிந்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செல்லப் பிராணிகள் மீது மிகுந்த ஆர்வ கொண்டவர். அதன் பொருட்டு வெள்ளை மாளிகைக்கு புதிய பூனை ஒன்றை வரவு செய்திருக்கிறார். வில்லோ என்ற இரண்டு வயதான கிரே கலர் நிற பூனை ஒன்று வெள்ளை மாளிகைக்கு வந்துள்ளது. இப்பூனை குறித்து ஜோ பைடனின் மனைவி ஜெல்லி பைடன், கூறும்போது, ”ஜோ பைடனின் சொந்த ஊரான பென்சில்வேனியாவில் உள்ள வில்லோ … Read more

பிப்ரவரி 15: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 15) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,39,221 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more

ஹிஜாப், பாலியல் வன்கொடுமை | "முற்போக்கு சிந்தனைகளை வளர்ப்பீர்" – காங். எம்எல்ஏவுக்கு கர்நாடக அமைச்சர் அறிவுரை

பெங்களூரு: “முற்போக்கு சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்” என்று கர்நாடக காங்கிரஸ் கட்சி எம்எல்ஏவுக்கு, அம்மாநில பாஜக அமைச்சர் அறிவுரை கூறியுள்ளார். கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ ஜமீர் அகமது, “பெண்கள் ஹிஜாப் அணிவதைத் துறந்ததாலேயே இந்தியாவில் பாலியல் வன்கொடுமை விகிதம் அதிகரித்துள்ளது” எனப் பேசியது பெரும் சர்ச்சையாகி உள்ளது. இதனைக் கண்டித்துள்ள கர்நாடக மாநில உயர்க்கல்வி அமைச்சர் சி.என்.அஷ்வந்த் நாராயண், “இதுபோன்ற மனநிலையை மாற்றிக் கொண்டு முற்போக்கான சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்” என்று காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு அறிவுரை … Read more

ஆப்கனில் வறுமை, பட்டினியால் சிறுநீரகங்களை விற்கும் மக்கள்: தடையை விலக்க உலக வங்கிக்கு கோரிக்கை

ஹெரத்: ஆப்கானிஸ்தானில் வறுமை, பட்டினி காரணமாக சிறுநீரகங் களை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கன் மீதான தடையை உலக வங்கி விலக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் முகாமிட்டி ருந்த அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு முழுவதுமாக தாயகம் திரும்பின. இதையடுத்து, அங்குநடந்த உள்நாட்டுப் போரில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர். ஆனால் தலிபான்களை அங்கீகரிக்க பல உலக நாடுகள் மறுத்து வருகின்றன. மேலும் உலக வங்கி, சர்வதேச நிதியம் … Read more

திருவண்ணாமலையில் 4 நகராட்சிகளிலும் திமுக, அதிமுகவுக்கு கடும் நெருக்கடி:  ‘முடிவை’ தீர்மானிப்பது யார் யார்?

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளிலும் திமுக மற்றும் அதிமுகவுக்கு பாமக, பாஜக, மநீம, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் கடும் நெருக்கடியை கொடுக்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளுக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. திருவண்ணாமலை, ஆரணி, திருவத்திபுரம் (செய்யாறு) மற்றும் வந்தவாசி ஆகிய 4 நகராட்சிகளிலும் திமுக – அதிமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் கே.பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் … Read more