கடந்த டிசம்பரில் இலங்கை கடற்படை கைது செய்த 9 மீனவர்கள் சென்னை திரும்பினர்: தனி வாகனத்தில் சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பு

சென்னை: இலங்கை கடற்படையினரால் கடந்த டிசம்பர் மாதம் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களில் 9 பேர்நாடு திரும்பினர். அவர்கள் சொந்தஊருக்கு அனுப்பி வைக்கப்பட்ட னர். ராமேசுவரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள், கடந்த ஆண்டு டிச.18-ம் தேதி, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அதற்கு அடுத்த நாளும் பல மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். 2 நாட்களில் 56 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை மீட்க மத்திய, மாநிலஅரசுகள் நடவடிக்கை … Read more

இந்தியாவுக்கு எதிராக பொய் செய்தி; 60-க்கும் மேற்பட்ட சமூக ஊடக கணக்குகள் முடக்கம்: மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்

புதுடெல்லி: மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் மாநிலங்களவையில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அளித்த பதிலில் கூறியதாவது: கருத்து சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரம் குறித்து மத்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. அதேநேரம், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நாட்டுக்கு எதிராக பொய்யான செய்திகள் வெளியிடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. கடந்த 2 மாதங்களில் இந்தியாவுக்கு எதிராக பொய்யான செய்திகளை வெளியிட்ட யூடியூப் உள்ளிட்ட பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களின் … Read more

பேடிஎம் மால் தளம் ஹாக் செய்யப்பட்டதா? – மறுப்பு தெரிவித்துள்ள நிறுவனம்

பேடிஎம் மால் தளத்தின் பயனர் விவரங்களை ஒட்டுமொத்தமாக ஒரு குழு திருடியுள்ளதாகவும், அதை வைத்து பேடிஎம் மால் தளத்தைப் பணம் கேட்டு மிரட்டியிருப்பதாகவும் இணையப் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. ஆனால் பேடிஎம் தரப்பு இதை மறுத்துள்ளது. சைபில் (cyble) என்கிற இணையப் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள தகவலில், ஒரு சைபர் கிரைம் குழு, ஜான் விக் என்கிற பெயரில் இயங்கி வருகிறது. இது பேடிஎம் மால் செயலி, இணையதளம் இரண்டிலும் ஊடுருவி அத்தனை தகவல்களையும் … Read more

பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை

சென்னை: சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர்அண்ணாமலை வலியுறுத்தியுள் ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று அதிகாலை 1.20 மணி அளவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இத்தகவல் அறிந்ததும், உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்துக்காக தூத்துக்குடி சென்றிருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உடனே சென்னை … Read more

முதல்கட்டமாக 58 தொகுதிகளில் அமைதியாக நடந்த தேர்தல்; உ.பி.யில் 60.17% வாக்குகள் பதிவு: நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்

லக்னோ: உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கு முதல்கட்டமாக 58 தொகுதிகளில் நேற்று அமைதியாக தேர்தல் நடந்து முடிந்தது. இதில் சராசரியாக 60.17 சதவீத வாக்குகள் பதிவாகின. உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு பிப்.10-ம் தேதி (நேற்று) முதல் மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடக்கும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தத் தேர்தலில் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. … Read more

சாம்சங் மொபைல் விற்பனை சரிவு: தெற்காசியாவில் முதலிடம் பிடித்த ஓப்போ

தெற்காசிய ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் முதலிடத்திலிருந்த சாம்சங் நிறுவனம், இரண்டாவது காலாண்டு முடிவில் இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஏப்ரல் – ஜூன் காலகட்டத்தில் 20.3 சதவீத சந்தை பங்குடன் ஓப்போ நிறுவனம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதே காலகட்டத்தில் சாம்சங் நிறுவனத்தின் சந்தைப் பங்கு 19.5 சதவீதம் என்கிற நிலையில் உள்ளது. மேலும் இந்த பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் சீன ஸ்மார்ட்ஃபோன் நிறுவனங்களே இடம்பிடித்துள்ளன. மூன்றாவது இடத்தில் விவோ, நான்கில் ஸியோமி மற்றும் ஐந்தாவது இடத்தில் ரியல்மீ ஆகிய … Read more

பிப்ரவரி 10: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 10) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,28,068 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் பிப்.9 வரை பிப்.10 பிப்.9 … Read more

‘விற்றோம், விற்கிறோம், விற்போம்’ என்பதைத் தவிர வேறு சாதனை மத்திய அரசிடம்  இருக்குமா? – நவாஸ்கனி கேள்வி

புதுடெல்லி: மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் எம்.பி.யான கே.நவாஸ்கனி உரையாற்றினார். அதில் அவர், ‘விற்றோம், விற்கிறோம், விற்போம்’ என்பதைத் தவிர வேறு சாதனை மத்திய அரசிடம் இருக்குமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து நாடாளுமன்ற மக்களவையில் ராமநாதபுரம் தொகுதி எம்.பி.யும் முஸ்லீம் லீக்கின் மாநிலத் துணைத்தலைவருமான கே.நவாஸ்கனி கூறியதாவது: இந்த அரசின் நிதிநிலை அறிக்கை வழக்கம்போல வார்த்தை ஜாலங்களாலும், ஏமாற்றங்களாலும் நிறைந்தே காணப்பட்டதை பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன். கார்ப்பரேட்டுகளின் … Read more

நோக்கியா 3310 மொபைலுக்கு வயசு 20: ட்விட்டரில் ரசிகர்கள் நினைவுப் பகிர்வு

மிகப் பிரபலமான நோக்கியா 3310 மாடல் மொபைல் அறிமுகமாகி இன்றோடு 20 வருடங்கள் ஆகின்றன. இந்த மொபைலின் ரசிகர்கள் பலரும் இதுகுறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். செப்டம்பர் 1, 2000 அன்று நோக்கியா 3310 அறிமுகம் செய்யப்பட்டது. அடர் நீல நிறத்தில், பச்சை ஒளித் திரையில் இருந்த இந்த மொபைலில் ஸ்னேக் என்கிற விளையாட்டும் மிகப் பிரபலமானது. 2003-ம் ஆண்டு, மேலே சிறிய டார்ச்சுடன் கூடிய 1100 அறிமுகமானது. விற்பனைக்கு வந்த காலத்தில் அதிகம் விற்ற … Read more

பிப்ரவரி 10: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 10) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,28,068 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more