எக்கச்சக்கமான வீரர்களை பலிகொடுத்துள்ள ரஷ்யா… இழந்தது என்ன?: அமெரிக்காவும் பிரித்தானியாவும் வெளியிட்டுள்ள தகவல்கள்

உக்ரைனை ஊடுருவியதால் எக்கச்சக்கமான வீரர்களை இழந்துள்ளது ரஷ்யா. உக்ரைன் போரில் ரஷ்யா குறைந்தது 7,000 வீரர்களை பலிகொடுத்துள்ளதுடன், ரஷ்ய வீரர்கள் சுமார் 14,000 முதல் 21,000 பேர் வரை காயமடைந்திருக்கலாம் என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. நான்கு தளபதிகள், ஏராளம் படைவீரர்கள் என பலிகொடுத்துள்ள ரஷ்யாவின் இழப்பைக் கணக்கிட்டால், புடின் உக்ரைனை ஊடுருவதற்காக அனுப்பிய படைவீரர்களில் ஐந்தில் ஒரு பங்கு சேதமடைந்திருக்கலாம் என பென்டகன் தெரிவித்துள்ளது. அத்துடன், ரஷ்ய ஊடுருவல் கடந்த 24 மணி நேரத்தில் அனைத்து … Read more

ஜேர்மன் நாடாளுமன்றத்தில் மேற்கத்திய தலைவர்களை கடுமையாக விமர்சித்த ஜெலன்ஸ்கி

ஜேர்மன் நாடாளுமன்றத்தில் காணொளி காட்சி மூலம் உரையாற்றிய ஜெலன்ஸ்கி, மேற்கத்திய நாடுகளின் தலைவர்களை கடுமையாக விமர்சித்தார். ஜெலன்ஸ்கி உரையாற்ற தொடங்குவதற்கு முன், ஜேர்மனி நாடாளுமன்றத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கை தட்டி வரவேற்றனர். ஜேர்மன் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜெலன்ஸ்கி, படையெடுப்புக்கு முன் உக்ரைன் எல்லையில் ரஷ்ய படைகள் கூடினர், அப்போது மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் மிகவும் மந்தமாக செயல்பட்டனர், ரஷ்யாவைத் தடுக்க போதுமான நடவடிக்கையை முன்னெடுக்கவில்லை. நீங்கள் அனைவரும் உங்களின் பொருளாதாரம் குறித்து மட்டுமே கவலைப்பட்டீர்கள். … Read more

திடீரென உயிரிழந்த தமிழ் சின்னத்திரை நடிகர்! பண நெருக்கடியால் வீட்டை இழக்கும் பரிதாப நிலையில் மனைவி

பிரபல நடிகர் ராஜசேகரின் மனைவி வீட்டு கடனை கட்ட முடியாமல் தவித்து வரும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். தமிழ் திரையுலகம் மற்றும் சின்னத்திரையில் பிரபல நடிகராக இருந்தவர் ராஜசேகர். இவர் ஒளிப்பதிவாளர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஆவார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பட்டி தொட்டியெங்கும் ராஜசேகர் பிரபலமானார். இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு ராஜசேகர் உடல் நலக்குறைவால் திடீரென மரணமடைந்தார். ராஜசேகர் இறப்பதற்கு முன்பு சென்னை வடபழனியில் வீடு ஒன்றை … Read more

சுவிட்சர்லாந்தில் ஆடம்பர பங்களா ஒன்றை வாங்க திட்டமிட்ட புடின்: பின்னர் நடந்தது…

சுவிட்சர்லாந்தில் கிட்டத்தட்ட ஆடம்பர பங்களா ஒன்றை வாங்கியிருப்பாராம் புடின்… ஆனால், என்ன காரணத்தாலோ அவரது எண்ணம் நிறைவேறாமல் போயிருக்கிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் பினாமி பெயரில் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளதால், உலகின் நம்பர் ஒன் பணக்காரர் புடின்தான் என்று கூறும் செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்த தகவலை Aargauer Zeitung என்னும் சுவிஸ் செய்தித்தாள் வெளியிட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு, தனது முதல் பதவிக்காலத்தை புடின் நிறைவு செய்திருந்த நேரத்தில், Fribourg மாகாணத்தில் உள்ள அந்த … Read more

இரகசிய காதலிகள்வசம் சொத்துக்களை ஒப்படைத்துள்ள உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் புடின்: வெளியாகியுள்ள பரபரப்பு தகவல்

சமீபத்தில், உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் புடின்தான் என்று கூறும் செய்திகள் வெளியானது நினைவிருக்கலாம்… இந்நிலையில், தற்போது புடின் தனது சொத்துக்களை தனது இரகசிய காதலிகள், அவரது பிள்ளைகள், தனது நண்பர்கள் என பலரிடம் கொடுத்து வைத்திருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் தேசிய குற்றவியல் ஏஜன்சியின் சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகள் குறித்து விசாரிக்கும் பிரிவு, பிரித்தானியாவிலிருக்கும் புடினுடைய சொத்துக்களை வேட்டையாடத் துவங்கியுள்ளது. இதற்கிடையில், புடினுடைய மூன்று மகள்களில் ஒருவரான Elizaveta (19) என்ற இளம்பெண்ணுக்கு பிரித்தானியாவிலுள்ள சர்ரேயில் … Read more

உக்ரைன் எல்லையில் கூட்டத்தில் ஒருவராக நின்று உக்ரைன் அகதிகளுக்கு உதவும் ஜேர்மன் இளவரசர்

ஜேர்மன் இளவரசர் ஒருவர், தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளாமல், கூட்டத்தில் ஒருவராக நின்று உக்ரைனிலிருந்து வெளியேறும் அகதிகளுக்கு உதவுவது குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. Heinrich Donatus (27), ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர். ஜேர்மனியின் Schaumburg-Lippe என்ற பகுதியை ஆண்ட மன்னர் பரம்பரையில் வந்தவர் அவர். முதல் உலகப்போருக்குப் பின் மன்னராட்சி ஒழிக்கப்படுவது வரை, அவரது முன்னோர்கள் அந்த பகுதியை ஆண்டு வந்துள்ளார்கள். ஆக, ஒரு இளவரசராக இருந்தும், தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமல், போலந்து எல்லையில் தொண்டு நிறுவனம் … Read more

ஆயுதங்களை போட்டு ரஷ்யாவிடம் சரணடையுங்கள்.. உக்ரேனிய துருப்புகளுக்கு ஜெலன்ஸ்கி உத்தரவிடும் வீடியோ வைரல்

 ஆயுதங்களை போட்டு ரஷ்யாவிடம் சரணடையுமாறு உக்ரேனிய துருப்புகளுக்கு ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அழைப்பு விடுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. குறித்த வீடியோ உக்ரேனிய டிவி சேனலான Ukrayina 24-ன் இணையதளத்தில் ஒளிபரப்பாகியுள்ளது, மேலும் ஜெலன்ஸ்கி பேசிய உரை எழுத்து வடிவிலும் ஒளிபரப்பப்பட்டுள்ளது. குறித்த வீடியோவில் ஓடியோவுக்கு ஏற்ப ஜெலன்ஸ்கி உதடுகள் அசைந்தாலும், அவரது தலையும் குரலும் பொருத்தமாக இல்லை. இதுகுறித்து Ukrayina 24 டிவி வெளியிட்ட அறிக்கையில், அதன் இணையதளமும், டிக்கரும் ஹேக் செய்யப்பட்டதாகவும், தற்போது சரி … Read more

ஒரு அடி நிலத்தைக்கூட விட்டுத்தரமாட்டோம்… புடினுடைய 15 அம்ச திட்டத்தை திட்டவட்டமாக நிராகரித்த உக்ரைன் ஜனாதிபதி

போரை நிறுத்தி, உக்ரைனை விட்டு வெளியேறவேண்டுமானால், தங்கள் அமைதித் திட்டத்திற்கு உக்ரைன் சம்மதிக்கவேண்டும் என்று கூறி 15 அம்ச திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளது ரஷ்யா. ஆனால், அந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ள திட்டவட்டமாக மறுத்துவிட்டார் உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி. காரணம், உண்மையில் அந்த 15 அம்ச அமைதித் திட்டம், ரஷ்யா விதித்துள்ள 15 நிபந்தனைகள்தான். அதில் என்ன நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன என்றால், ரஷ்யா கிரீமியாவை தன்னுடன் இணைத்துக்கொண்டதை உக்ரைன் ஏற்றுக்கொள்ளவேண்டும். எந்த Luhansk மற்றும் Donetsk ஆகிய … Read more

சில உத்தரவாதங்களுக்கு இரு தரப்பும் சம்மதம்! உக்ரைன் – ரஷ்யா போரில் விரைவில் தீர்வு… முக்கிய தகவல்

உக்ரைன் – ரஷ்யா இடையேயான பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். நோட்டோவில் உக்ரைன் விரும்பிய நிலையில் அதை எதிர்த்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கடந்த மாதம் 24ம் திகதி, உக்ரைன் மீதான தாக்குதலுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, ரஷ்ய படையினர் உக்ரைனுக்குள் நுழைந்தனர். குண்டுகளை வீசியும், ஏவுகணைகளை வீசியும் உக்ரைன் மீதான தாக்குதல்களை துவங்கினர். ரஷ்யா – உக்ரைன் இடையிலான இந்த பிரச்னைக்கு தீர்வு காண, இருநாட்டு … Read more

நடுங்கிய இந்திய அணி! உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்த இலங்கை… இதே நாளில் நிகழ்ந்த சரித்தரம்

சரியாக 26 ஆண்டுகளுக்கு முன்பு (1996) இதே மார்ச் 17ல் லாகூரில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றது இலங்கை. அதுவரை கத்துக்குட்டிகளாக அறியப்பட்டவர்கள் இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா என எல்லா நாடுகளையுமே அலறவைத்து அழவைத்தார்கள். இலங்கையை வெல்வதே 90-களின் இந்திய அணிக்கு மாபெரும் லட்சியமாகிப்போனது. 90-களில் இலங்கை கிரிக்கெட் அணியைப் பார்த்தாலே இந்திய ரசிகர்கள் கொலைவெறியாவார்கள். காரணம் அன்றைய காலகட்டத்தில் இந்தியாவுக்கு மிகவும் அவமானகரமானத் தோல்விகளைப் பரிசளிக்கும் அணியாக இருந்தது இலங்கை, இந்திய அணிக்கும் இலங்கையை பார்த்தால் … Read more