ரஷ்ய தூதரகத்தின் வாயிலை இடித்து நொறுக்கிய டிரக்! வைரலாகும் காட்சி., ஓட்டுநர் கைது

அயர்லாந்தில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் வாயில்களை டிரக் ஒன்று இடித்து உடைத்தெரிந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. டிரக் ஓட்டுநரை பொலிஸார் கைது செய்தனர். டெஸ்மண்ட் விஸ்லி எக்லெசியாஸ்டிகல் சப்ளைஸ் நிறுவனத்திற்கு சொந்தமான அந்த பெரிய சப்ளை டிரக் தெற்கு டப்லினில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் வாயில் அருகே ரிவர்ஸ் வந்து கொண்டிருந்த நிலையில், வேகமாக சென்று தூதரகத்தின் இரும்பு கதவுகளை இடித்து தள்ளியது. ரஷ்ய தூதரகத்தின் வாயில் மீது டிரக் மோதியதை மக்கள் பிளக்ஸ் கார்டுகளுடன் … Read more

பிரித்தானியாவில் நாய் கடித்து குதறியதில் 3 மாத குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்: இருவர் கைது

பிரித்தானியாவில் நாய் கடித்து குதறியதில் 3 மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் லிங்கன்ஷையரில் உள்ள வூடல் ஸ்பாவிற்கு அருகிலுள்ள ஓஸ்ட்லர்ஸ் தோட்டத்தில் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு 11.15 மணியளவில் இந்த கொடூரமான சம்பவம் நடந்தது. கட்டுப்பாட்டை மீறிய நாய்க்கு பொறுப்பாக இருந்ததாக சந்தேகத்தின் பேரில் 40 வயதான பெண்ணும் 54 வயது ஆணும் கைது செய்யப்பட்டு காவலில் உள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து கிழக்கு மிட்லாண்ட்ஸ் … Read more

கருங்கடலில் ரஷ்ய கப்பலை தாக்கிய உக்ரைன்!

கருங்கடலில் ரஷ்ய ரோந்து கப்பலை தாக்கியதாக உக்ரைன் கடற்படை அறிவித்துள்ளது. இதுகுறித்து உக்ரைன் கடற்படை வெளியிட்ட அறிக்கையில், ஒடேசா பகுதியைப் பாதுகாக்கும் போது கடற்படைப் படைகள் ரஷ்யக் கப்பலைத் தாக்கியுள்ளன. இந்த தாக்குதலில் ரஷ்ய தரப்பில் உயிர்ச்சேதம் ஏற்பட்டதா என்பது உடனடியாகத் தெரியவில்லை என தெரிவித்துள்ளது. ரஷ்ய ரோந்து கப்பலான Vasily Bykov-ஐ உக்ரைன் கடற்படை தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலை உறுதிப்படுத்தும் வகையில் கருங்கடலில் கப்பல் ஒன்று தாக்கப்பட்ட தீப்பற்றி எரிந்து கரும்புகை வான் … Read more

1,000 கி.மீ தன்னந்தனியாகப் பயணித்த உக்ரைன் சிறுவன்! நெகிழ வைக்கும் காரணம்

12-வது நாளாக உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் நடந்து கொண்டிருக்கும் வேளையில் 11 வயது சிறுவன் ஒருவன் தனது தாய் கூறியதால், உறவினர் ஒருவரை கவனித்துக்கொள்வதற்காக 1,000 கிலோமீட்டர் ரயில் தன்னந்தனியாக, போர்ச் சூழலில் பயணம் செய்துள்ளான்.  இந்த நிகழ்வு பலருக்கும் அதிர்ச்சியுடன்கூடிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறித்த அந்த சிறுவன் ரயில் மூலம் ஸ்லோவாக்கியாவுக்குப் தன்னந்தனியாக  பயணம் செய்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஸ்லோவாக்கியாவைச் சென்றடைந்த அந்தச் சிறுவனை அங்குள்ள தன்னார்வலர்கள் உணவு வழங்கி கவனித்ததாகவும், பின்னர் ஸ்லோவாக்கியா உள்துறை … Read more

வார்னே மாரடைப்புக்கு இதுதான் காரணமா? மனம் திறக்கும் மேலாளர்

அவுஸ்திரியாவின் சுழற்பந்து சம்பவான் ஷேன் வார்ன் இறப்பிற்கு அவரது மிகவும் மோசமான உணவு கட்டுப்பாடே காரணமாக இருக்கலாம் என ஷேன் வார்னேவின் மேலாளர் ஜேம்ஸ் எர்ஸ்கின் தெரிவித்துள்ளார். அவுஸ்திரியாவின் சுழற்பந்து சம்பவான் ஷேன் வார்ன் மாரடைப்பு காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று தாய்லாந்தில் மரணமடைந்தார். இதையடுத்து உலக கிரிக்கெட் உலகமே அவருக்கு துக்கம் அனுசரித்து, தங்கள் வருத்ததையும் அவருடனான நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் ஷேன் வார்னேவின் மாரடைப்புக்கு மிகவும் மோசமான உணவு கட்டுப்பாடு முறைகளே … Read more

உக்ரைனுக்கு உதவுவதாக அறிவித்தது சீனா!

 உக்ரைனுக்கு சீனாவின் செஞ்சிலுவை சங்கம் மனிதாபிமான உதவுகளை வழங்கும் என அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் Wang Yi அறிவித்துள்ளார். சீனப் பாராளுமன்றத்தின் வருடாந்தக் கூட்டத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த Wang Yi, உக்ரைன் நிலைமைக்கான காரணங்கள் சிக்கலானவை மற்றும் ஒரே இரவில் எடுக்கப்பட்ட முடிவல்ல என கூறினார். சிக்கலான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அமைதியும் பகுத்தறிவும் தான் தேவை, அதை விட்டுவிட்டு எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றக் கூடாது. சீன ஏற்கனவே அமைதி பேச்சுவார்த்தைகளை ஊக்குவிப்பதற்கான சில பணிகளை … Read more

ரஷ்ய விமானப்படை விமானத்தைத் தாக்கி வீழ்த்திய உக்ரைன் ஏவுகணை: உற்சாகக் குரல் எழுப்பிய உக்ரைன் வீரர்கள்

வல்லரசு நாடுகளில் ஒன்றாக கருதப்பட்ட ரஷ்யா, உக்ரைன் படைகளின் தாக்குதலில் தன் விமானங்களை இழந்துவருவதைக் காட்டும் வீடியோக்கள் வெளியானவண்ணம் உள்ளன. ஏற்கனவே ரஷ்ய விமானங்கள், ஹெலிகொப்டர்கள் உக்ரைன் வீரர்களால் வீழ்த்தப்படும் பல காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது ரஷ்ய விமானப்படை விமானம் ஒன்று உக்ரைன் ஏவுகணைத்தாக்குதலுக்கு உள்ளாகும் காட்சிகள் சில வெளியாகியுள்ளன. உக்ரைனிலுள்ள Kharkiv என்ற நகரில் இந்த காட்சி பதிவாகியுள்ளது. தரையிலிருந்து வான் நோக்கிச் சென்று தாக்கும் இரண்டு ஏவுகணைகளால் ரஷ்ய விமானப்படை விமானம் ஒன்று … Read more

உக்ரைனில் போருக்கு மத்தியிலும் தலைதூக்கும் இனவெறுப்பு! அதிர்ச்சியூட்டும் உண்மை சம்பவம்

போர் வெடித்து, பலர் உயிர்விட்டுக்கொண்டிருக்கும் நிலையிலும், எப்படித்தான் சிலரால் இனவெறுப்புக் காட்டமுடிகிறதோ தெரியவில்லை. உக்ரைனில் போர் வெடித்துள்ள நிலையில், அங்கிருந்து எப்படியாவது வெளியேறிவிடலாம் எனத் துடிக்கும் மக்களையும், மனிதாபிமானமின்றி இனவெறுப்புக் காட்டி அவமதிக்கும், பாரபட்சம் காட்டும் சம்பவங்கள் தொடர்வதாக, தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன. கருப்பினத்தவர்கள் முதல் மத்திய கிழக்கு நாட்டவர்கள் வரை பலரும் உக்ரைனை விட்டு வெளியேற முயற்சிக்கும் நிலையில், தாங்கள் இன வெறுப்புக்கும் பாரபட்சத்துக்கும் உள்ளானதாக கடும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளாலார்கள். அவ்வகையில், நைஜீரியாவைச் சேர்ந்த … Read more

உக்ரைனில் உள்ள ஒரு குடும்பத்துக்கு நேர்ந்த பயங்கரம்! சும்மா விட மாட்டேன் என ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஆக்ரோஷம்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கோபத்துடன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் 12வது நாளாக தொடர்கிறது. பொதுவாக மீடியா பேட்டிகளில் போருக்கு இடையிலும் அன்பாக பேச கூடியவர் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி. ஆனால் அவர் இன்று காலை கொடுத்த பேட்டியில் ஆக்ரோஷமாக காணப்பட்டார். காரணம்.. ஒரு குடும்பம். உக்ரைன் கீவ் வெளியே இருக்கும் சின்ன கிராமம் லிர்ப்பின். நேற்று இரவு இங்கிருந்து 20 பேர் வரை வெளியேற முயன்று உள்ளனர். அங்கு … Read more

கொல்லப்பட்ட ரஷ்ய தளபதிகள்! வெகுண்டெழுந்த உக்ரைன் மீண்டும் முக்கிய நகரை கைப்பற்றியது… முக்கிய தகவல்

ரஷ்யா வசம் சென்ற முக்கிய நகரை உக்ரைன் மீண்டும் கைப்பற்றி தரமான பதிலடியை கொடுத்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது. உக்ரைனில் உள்ள முக்கிய நகரமான Chuhuivவை ரஷ்யா சமீபத்தில் தனதாக்கியது. இந்த நிலையில் விடா முயற்சியுடன் அந்த நகரை மீட்க போராடிய உக்ரைன் தற்போது நகரை மீண்டும் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் ரஷ்ய வீரர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். சில முக்கிய தளபதிகளும் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. உக்ரைனின் … Read more