நடிகர் சங்க தேர்தல் விவகாரம்! உயர்நீதிமன்றம் கேள்வி…

சென்னை: நடிகர் சங்க தேர்தல்  நடத்த உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்,   நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடத்துவதில் என்ன சிக்கல் உள்ளது?  கேள்வி எழுப்பி உள்ளது.  தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி  தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களது பதவி காலம் 2024-ம் ஆண்டு முடிவடைந்தது. இதையடுத்து புதிய தேர்தல் நடத்தப்படாமல், அவர்களுக்கே பதவி நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து,  நடிகர் சங்க உறுப்பினர் நம்பிராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் … Read more

‘ஸ்டாலின் என்றால் மேன் ஆஃப் ஸ்டீல் ‘ என பொருள்! தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் மு.க.ஸ்டாலின்

ஓசூர்: ஓசூரில் 2,000 ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என ஓசூர் தொரில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ஸ்டாலின் என்றால் மேன் ஆஃப் ஸ்டீல் எனப்பொருள் என்பதால் உறுதியுடன் கூறுகிறேன் என்றும் தெரிவித்தார். ஏற்கனவே ருஷ்ணகிரி மாவட்டத்தில், 2,000 ஏக்கரில் அமைய உள்ள ஓசூர் விமான நிலையத்துக்கு, சூளகிரி தாலுகாவில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.  இதை முதல்வர் ஸ்டாலின் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில்  இன்று தொடங்கியுள்ள முதலீட்டாளர்கள் … Read more

ஆளுநரிடம் மசோதாக்கள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும்போது, ​​மாநிலங்கள் மீது எப்படி குற்றம் கூற முடியும்! உச்சநீதிமன்றம்…

டெல்லி: பல ஆண்டுகளாக ஆளுநரிடம் மசோதாக்கள் நிலுவையில் இருக்கும்போது, ​​மாநிலங்கள் தவறான எச்சரிக்கையை எழுப்புகின்றன என்று எப்படிச் சொல்ல முடியும்?  என மத்திய அரசிடம்  உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. மேலும், குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகள் விவகாரத்தில் முந்தைய தீர்ப்பை சரி பார்க்க மாட்டோம் என்றும் கூறியது. முன்னதாக, எதிர்க்கட்சிகள் ஆளும் கர்நாடகா, பஞ்சாப், கேரளா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் செவ்வாய்க்கிழமை  விசாரணையின்போது,  உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்ததாவது, சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதா அரசியலமைப்பிற்கு … Read more

லைட்டா கண் அசந்தேன்… வேலை நேரத்தில் தூங்குவதை பெரும்பாலான பைலட்டுகள் ஒப்புக்கொண்டுள்ளனர்…

ஜெர்மனியைச் சேர்ந்த வெரினிகுங் காக்பிட் தொழிற்சங்கம் சமீபத்தில் நடத்திய கணக்கெடுப்பில் பெரும்பாலான பைலட்டுகள் வேலை நேரத்தில் கண் அயர்வதை ஒப்புக்கொண்டுள்ளனர். விமானப் பயணங்களின் போது தூங்குவது அதன் உறுப்பினர்களுக்கு “கவலைக்குரிய யதார்த்தமாக” மாறிவிட்டது, இது அத்துறையில் “அதிகரித்து வரும் சோர்வு” குறித்த எச்சரிக்கை என்று தெரிவித்துள்ளது. 900 க்கும் மேற்பட்ட விமானிகளிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த கணக்கெடுப்பில் 93 சதவீதம் பேர் ஒருமுறையாவது தூங்கியதாக ஒப்புக்கொண்டுள்ளனர். 44 சதவீதத்தினர் வழக்கமாக தூங்குவதாகவும், 12 சதவீதம் பேர் ஒவ்வொரு பயணத்தின் … Read more

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்யக் கோரிய மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை ரத்து செய்யக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டியை நடத்துவது நாட்டின் கண்ணியத்திற்கும் மக்களின் உணர்வுக்கும் எதிராக தவறான செய்தியை வழங்குவதாக உள்ளது என ஊர்வசி ஜெயின் தலைமையிலான நான்கு சட்டக் கல்லூரி மாணவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இது தொடர்பான மனு நீதிபதிகள் ஜே.கே. … Read more

வார இறுதிநாட்கள் விடுமுறையை யொட்டி, 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கம்! தமிழ்நாடு அரசு தகவல்…

சென்னை: வார இறுதிநாட்கள் விடுமுறையை யொட்டி, 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இதன் படி சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, 12/09/2025 (வெள்ளிக்கிழமை) 13/09/2025 (சனிக்கிழமை) மற்றும் 14/09/2025 (ஞாயிறுக் கிழமை … Read more

அன்புமணியை நீக்க ராமதாசுக்கு அதிகாரம் இல்லை! பாமக பாலு ….

சென்னை: அன்புமணியை நீக்க பாமக நிறுவனர் ராமதாசுக்கு அதிகாரம் இல்லை என அன்புமணி தரப்பு வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளார். பாமகவில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டது பாமக தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இந்த  நிலையில்  அன்புமணி  ஆதரவாளளர் வழக்கறிஞரும், எம்எல்ஏவுமான  பாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,   அன்புமணியை நீக்க ராமதாசுக்கு அதிகாரம் இல்லை. அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தது கட்சி விதிகளுக்கு எதிரானது என தெரிவித்து உள்ளார். பாமக விதிகளின்படி கட்சி நிர்வாக பணிகளை நிறுவனர் இந்த … Read more

அரசியலுக்கு தகுதியற்றவர்: பாமகவில் இருந்து அன்புமணி டிஸ்மிஸ்! டாக்டர் ராமதாஸ் அதிரடி

விழுப்புரம்: பாமகவின் அனைத்து பதவிகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து  தனது மகன் அன்புமணி ராமதாசை நீக்குவதாக கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்து உள்ளார். பாமக செயல் தலைவர் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். மேலும் அரசியலுக்கு தகுதியற்றவர் அன்புமணி என்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி உள்ளார். இது பாமகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாமகவை கைப்பற்ற தந்தை மகனுக்கு இடையே … Read more

50% வரி ஏற்றிய டிரம்ப்… சீனா மற்றும் இந்தியா மீது 100% வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்திடம் வலியுறுத்தல்…

ரஷ்ய அதிபர் புட்டினுக்கு நெருக்கடி கொடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கையாக ஐரோப்பிய ஒன்றியம் சீனா மற்றும் இந்தியா மீது 100% வரிவிதிக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. சீனா மற்றும் இந்தியா மீது வரிவிதிப்பு குறித்து டிரம்ப் ஐரோப்பிய ஒன்றிய தூதர் டேவிட் சல்லிவன் மற்றும் பிற அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விவாதித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. இதை அமெரிக்க அதிகாரி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தூதர் ஒருவர் உறுதிப்படுத்தினார். ‘சீனாவும் … Read more

தாய்லாந்தில் கோரம்… உயிரியல் பூங்கா பராமரிப்பாளரை சிங்கங்கள் கடித்துக் கொன்றது…

தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள சஃபாரி வேர்ல்ட் பாங்காக்கில் என்ற உயிரியல் பூங்காவில் அங்கு பராமரிப்பாளராக பணிபுரியும் ஊழியரை சிங்கங்கள் தாக்கியதில் உயிரிழந்தார். 58 வயதான ஜியான் ரங்காரசமீ என்ற உயிரியல் பூங்கா பராமரிப்பாளர் சஃபாரி மண்டலத்தில் வாகனத்தில் இருந்து இறங்கி கீழே இருந்த ஏதோ ஒரு பொருளை எடுக்க முயற்சித்தார். அப்போது அவரது பின்னால் சுமார் 30 அடி தூரத்தில் இருந்து ஓடிவந்த சிங்கம் ரங்காரசமீ தலையில் தாக்கி அவரை கீழே தள்ளியது. பின்னர் அந்த சிங்கத்துடன் … Read more