திமுகவில் இணைந்தார் தவெக மகளிர் அணி நிர்வாகி நடிகை ரஞ்சனா நாச்சியார்

சென்னை: தவெகவின் மகளிர் அணி நிர்வாகியாக  இருந்து வந்த  நடிகை ரஞ்சனா நாச்சியார் அக்கட்சியில் இருந்து விலகி முதல்வர் ஸ்டாலின் முன்னிலை யில் திமுகவில் இணைந்தார். தவெக தலைவர்  விஜய் – சங்கீதா விவாகரத்து மற்றும் திரிஷா விவகாரம் தமிழ்நாடு அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிர்ப்பும், ஆதரவும் தொடர்ந்து வருகின்றன. பலர் விஜயின் நம்பகத்தன்மையை குறித்து பல்வேறு விமர்சனங்களை வைத்துள்ளனர். அதுபோல,  தவெகவில் மகளிர் அணி நிர்வாகியாக ரஞ்சனா நாச்சியாரும் விஜயின் நடவடிக்கையை … Read more

ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: ஜவுளி ஏற்றுமதியில் குஜராத், மகாராஷ்டிராவை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் த னது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஜவுளி ஏற்றுமதி: திராவிட மாடலின் 4 ஆண்டுகளில் 29% வளர்ச்சி. குஜராத்தையும் மகாராஷ்டிராவையும் பின்னுக்குத் தள்ளித் தமிழ்நாடு முதலிடம். 2020-2021-இல் 6,193.39 மில்லியன் டாலராக இருந்த தமிழ்நாட்டின் ஏற்றுமதி அளவு, திமுக அரசின் திட்டமிட்ட நடவடிக்கைகளினால் அடுத்த நான்காண்டுகளில் 7,997.17 மில்லியன் டாலராக … Read more

பொள்ளாச்சியில் பரபரப்பு – அதிமுக முன்னாள் அமைச்சர்களின் கட்அவுட்டுக்கு பாவாடை , செருப்பு மாலை அணிவிப்பு….

பொள்ளாச்சி: தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பொள்ளாச்சியில் பரபரப்பு  ஏற்பட்டுள்ளது.  அதிமுக முன்னாள் அமைச்சர்களின் கட்அவுட்டுக்கு பாவாடை , செருப்பு மாலையை மர்ம நபர்கள் அணிவித்துள்ளனர். இது பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்களின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொள்ளாச்சியில் அவர்களின் உருவப்படங்களுக்குச் செருப்பு மாலை அணிவித்து நூதன முறையில் போராட்டம் நடத்தப்பட்டது  இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை வைத்தவர்கள் யார் என தெரியவில்லை என கூறும் காவல்துறை யினர், அவர்களை … Read more

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் 49 கட்சிகள், அமைப்புகள்….

சென்னை: தமிழ்நாட்டில், அதிமுக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாய ககூட்டணியில்,  இதுவரை 49_கட்சிகள் மற்றும் அமைப்புகள்  இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கான சட்டமன்ற தேர்தல் தேதியை  இந்திய தேர்தல் ஆணையம்  மார்ச் 15ந்தேதி அன்று மாலை அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, ஏப்ரல் 23ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 4ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  அன்றைய தினம் … Read more

சென்னையில் நள்ளிரவில் பரவலான மழை – மேலும் இரண்டு நாட்கள் மழை நீடிக்கும் என தகவல்…

சென்னை:  சென்னையில் நள்ளிரவில் பரவலாக மழை பெய்த நிலையில், தமிழகத்தில் வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு  உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் வரவிருக்கும் நாட்களில் வானிலை மாற்றம் அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மார்ச் 18   முதல் 24 வரை பல பகுதிகளில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில்  மார்ச் 18ந்தேதி நள்ளிரவு … Read more

தமிழகத்தில் கடந்த 4 நாட்களில் ரூ.42.65 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல்

சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 15ந்தேதி மாலை முதல் 18ந்தேதி மாலை வரையிலான கடந்த 4 நாட்களில் ரூ.42.65 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மார்ச் 15ந்தேதி மாலை முதல் அமலுக்கு வந்துள்ள நலையில்,  மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினரால் தற்போது வரை ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தெரிவித்தார். மதுரை மாவட்டம், … Read more

திமுகவில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2வது நாளாக நேர்காணல்!

சென்னை: திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று 2வது நாளாக நேர்காணல் நடத்தி வருகிறார். தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற திமுக  தேர்தல் பணிகளை முன்னெடுத்து வருகிறது. இந்த முறை 4 முனை போட்டி நிலவி வந்தாலும் திமுக தலைமை 23 கட்சிகளைக்கொண்ட மெகா கூட்டணி அமைத்து, களத்தில் நிற்கிறது. இதனால் திமுகவின் வெற்றிவாய்ப்பு ஏறக்குறைய உறுதி செய்யப்பட்ட நிலையே தென்படுகிறது. இதற்கிடையில்,  திமுக தரப்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட … Read more

பெற்ற தந்தையை பார்சலில் அனுப்ப முயன்ற பெண்….! இது பெங்களூரு சம்பவம்..

பெங்களுரு:  தன்னை பெற்ற வயதான தந்தையை பார்சலில் அனுப்ப  ஒரு பெண் முயன்றுள்ளார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உளளது. இதுபோன்ற  கொடூஞ்செயல் கடுமையான  விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. இந்த சம்பவம் கார்டன் சிட்டி என போற்றப்படும்  பெங்களூரு மாநகரரில் அரங்கேறி உள்ளது. பெங்களூருவை சேர்ந்த இளம்பெண்  மற்றும் சிலர் சேர்ந்து,  தனது வயதான தந்தையை மங்களூருவுக்கு பார்சலில் அனுப்ப மூட்டை கட்டி தூக்கி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஏற்கனவே தமிழ்படம் ஒன்றில் இதுபோன்ற  நகைச்சுவம் சம்பவம் … Read more

வாய்த்தவறி சொல்லிவிட்டேன்.. ஜாதி குறித்த பேச்சுக்கு மன்னிப்பு கோரினார் நடிகர் பார்த்திபன்!

சென்னை:  திரையுலக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் பார்த்திபன், தனதுசாதி நாயுடு என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வாய்த்தவறி சொல்லிவிட்டேன்.. என தனது  ஜாதி குறித்த பேச்சுக்கு  நடிகர் பார்த்திபன் மன்னிப்பு கோரினார். பார்த்தீபன் சமீபத்தில் நடிகை திரிஷா குறித்து “குந்தவையை வீட்டுக்குள்ளேயே குந்த வைத்தால் நல்லது!”  என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து,  அதற்கு மன்னிப்புகோரி வீடியோ வெளியிட்டார். இந்த நிலையில்,  தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நடித்த ‘உஸ்தாத் பகத் சிங்’ திரைப்பட … Read more

சென்னையில் விதிமீறல்களை கண்காணிக்க 24 மணிநேர தேர்தல் கட்டுப்பாட்டு அறை – உதவி எண்ணும் வெளியீடு..

சென்னை: சென்னையில் விதிமீறல்களை கண்காணிக்க 24 மணிநேர தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது. மேலும், பொதுமக்கள் புகார் அளிக்க 24மணிநேர உதவி எண்ணும் வெளியிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, சென்னை ரிப்பன் கட்டிட வளாகத்தில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் ஊடக கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் தொடர் ஊடக கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன், 18004257012  என உதவி எண்ணும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் … Read more