தாய்லாந்தில் கோரம்… உயிரியல் பூங்கா பராமரிப்பாளரை சிங்கங்கள் கடித்துக் கொன்றது…

தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள சஃபாரி வேர்ல்ட் பாங்காக்கில் என்ற உயிரியல் பூங்காவில் அங்கு பராமரிப்பாளராக பணிபுரியும் ஊழியரை சிங்கங்கள் தாக்கியதில் உயிரிழந்தார். 58 வயதான ஜியான் ரங்காரசமீ என்ற உயிரியல் பூங்கா பராமரிப்பாளர் சஃபாரி மண்டலத்தில் வாகனத்தில் இருந்து இறங்கி கீழே இருந்த ஏதோ ஒரு பொருளை எடுக்க முயற்சித்தார். அப்போது அவரது பின்னால் சுமார் 30 அடி தூரத்தில் இருந்து ஓடிவந்த சிங்கம் ரங்காரசமீ தலையில் தாக்கி அவரை கீழே தள்ளியது. பின்னர் அந்த சிங்கத்துடன் … Read more

ஒசூர் மாநாடு – கிருஷ்ணகிரி மக்கள் நலத்திட்டங்கள்! இரண்டு நாள் பயணமாக நாளை கிருஷ்ணகிரி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: ஒசூர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் நாளை கலந்துகொள்ளவும், நாளை மறுநாள்,  கிருஷ்ணகிரியில்  மக்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவும்,  இரண்டு நாள் பயணமாக நாளை காலை  கிருஷ்ணகிரி புறப்படுகிறார் முதல்வர் ஸ்டாலின். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக  நாளை (வியாழக்கிழமை) கிருஷ்ணகரி மாவட்டத்திற்கு செல்கிறார். காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் ஓசூர்  தனேஜா விமான நிலையத்துக்கு செல்கிறார். அங்கு அவருக்கு கட்சி நிர்வாகிகள், அதிகாரிகள் சிறப்பான … Read more

700 இந்திய பயணிகள் சிக்கித் தவிப்பு… நேபாளில் தொடரும் போராட்டத்தால் காத்மாண்டு விமான நிலையம் மூடல்…

நேபாளத்தில் மூன்றாவது நாளாக இன்றும் வன்முறை நீடித்து வருகிறது. ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் ராஜினாமா செய்ததை அடுத்து ஆட்சி அதிகாரம் ராணுவத்திடம் ஒப்படைப்படும் என்று கூறப்படுகிறது. உலகளவில் கடந்த ஒரு வாரத்தில் ஜப்பான், பிரான்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்திலும் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து நேபாளத்திற்குச் சுற்றுலா சென்ற சுமார் 700 இந்திய சுற்றுலா பயணிகள் அங்கு … Read more

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை

டெல்லி: நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வது குறித்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தி வருகிறார். நாடு தழுவிய சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான கூட்டத்தை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று நடத்தி வருகிறார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்வது,  அதற்கான ஏற்பாடுகள் குறித்து  மாநில அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையத்தின் முக்கிய கூட்டம் நடந்து வருகிறது நாடு முழுவதும் … Read more

ராமேஸ்வரம் டூ காசி இலவச ஆன்மிகப் பயணம்! 60வயதுக்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…

சென்னை:  இந்து அறநிலையத்துறை சார்பில்,  ராமேஸ்வரம் முதல்  காசி வரையிலான  இலவசஆன்மிகப் பயணத்தக்கு  60வயது முதல் 70 வயதுக்குட்பட்டோர்  விண்ணப் பிக்கலாம் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்து உள்ளார். இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோயிலிலிருந்து காசி விஸ்வநாதசுவாமி கோயிலுக்கு தமிழ்நாட்டிலுள்ள 20 மண்டலங்களிலிருந்து 600 பக்தர்கள் கட்டணமில்லாமல் ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்படவுள்ளனர். இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் … Read more

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் திமுக மும்பெரும் விழா! செந்தில் பாலாஜி தகவல்…

கரூர்: நடப்பாண்டு திமுக முப்பெரும் விழா கரூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள நிலையில், இந்த விழா தமிழக  அரசியல் வரலாற்றில்  இதுவரை இல்லாத அளவுக்கு வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த விழாவாக  நடைபெறும்  என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். ஒவ்வொரு ஆண்டும் திமுக சார்பில் செப். 15 பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், செப். 17 பெரியார் பிறந்தநாள் மற்றும் திமுக உருவான நாள் ஆகிய மூன்றையும் ஒன்றிணைத்து முப்பெரும் விழா திமுக சார்பில் கொண்டாடப்படும். அந்த வகையில் … Read more

குடியரசு துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி வாழ்த்து..

சென்னை: குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள  சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி உள்பட அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.  துணை ஜனாதிபதிக்கான தேர்தல்  நேற்று நடைபெற்று, உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட கோவையைச் சேர்ந்த  சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். துணைஜனாதிபதி தேர்தலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த  ராதாகிருஷ்ணனுக்கு திமுக உள்பட தமிழக எம்.பி.க்கள் எதிர்த்து வாக்களித்தனர். இது சலசலப்பை … Read more

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ….

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்  நடைபெற்று வருகிறது. இந்த கூட்டம் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இன்று (செப். 9 ஆம் தேதி)  திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்  நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் ஏற்கனவே அறிவித்திருந்தார். அவரது அறிவிப்பில்,   செப்டம்பர் 09 (செவ்வாய் கிழமை) நண்பகல் 12.00 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி … Read more

தமிழ்நாட்டில் 86% அணைகள் நிரம்பி உள்ளன! தமிழ்நாடு அரசு தகவல்…

சேலம்: தமிழ்நாட்டின் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே 86% அணைகள் நிரம்பிய நிலையில் இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. நடப்பாண்டு, தென்கிழக்கு பருவமழை காலத்திலும் பரவலாக மழை பெய்து வந்த நிலையில், 86 சதவிகித அணைகள் முழு கொள்அளவை எட்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் மேட்டூர் அணையும் நடப்பாண்டில் 7வது முறையாக நிரம்பி உள்ளது. தமிழ்நாட்டில், வடகிழக்கு பருவமழை காலம் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை நீடிக்கும்.  இந்த காலகட்டம்,  தமிழ்நாட்டிற்கும், கரையோர … Read more

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் கண்ணாடி பாலத்தில் கீறல்! மாவட்ட ஆட்சியர் அழகுமீனா விளக்கம்

கன்னியாகுமரி: விவேகானந்தர் பாறையில் இருந்து  திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் கண்ணாடி பாலத்தில் கீறல் விழுந்துள்ள நிலையில், அதுகுறித்து  நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர், ஆட்சியர் அழகுமீனா விளக்கம் அளித்துள்ளார். கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலம் வலிமையாக உள்ளதாகவும்,   கீறல் விழுந்த இடத்தில் மட்டும் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர் என தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு சென்று சுற்றுலா பயணிகள் பார்வையிட வசதியாக … Read more