மகளிர் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியாஅபார வெற்றி

மவுன்ட் மாங்கானு: மகளிர் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அணி அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்தில் நடைபெறும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இன்று, பிஸ்மாக் மரூப் தலைமையிலான பாகிஸ்தான் அணியுடன் மோதியது. நியூசிலாந்தின் மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி … Read more

தமிழக அரசின் ஒருங்கிணைந்த முயற்சியால் உக்ரைனில் இருந்து 35 மாணவர்கள் மீட்பு…

உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை மீட்க தமிழக அரசு எடுத்த முயற்சியால் 35 மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். பிப். 24ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை துவங்கிய உடன் மாணவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திய தமிழ்நாடு அரசு அவர்களின் தரவுகளை சேகரிக்கத் துவங்கியது. அதேவேளையில், தாக்குதல் தீவிரமடைந்ததால் மாணவர்களை மீட்க முடியாத நிலை உள்ளதாகவும் அவர்கள் தாமாக அங்கிருந்து நடந்தாவது வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தனது முயற்சியைக் கைவிடாத தமிழக … Read more

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது இந்திய வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன்

இந்தியா – இலங்கை ஆகிய நாடுகளின் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 574 ரன்கள் அடித்த நிலையில் இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 174 ரன்களுக்கு ஆலவுட் ஆனது. 400 ரன்கள் முன்னிலையில் உள்ள இந்திய அணி இலங்கையை தொடர்ந்து ஆட வலியுறுத்தியது. ஆட்டம் துவங்கியதில் இருந்தே விக்கெட்டுகள் மளமளவென சரியத் தொடங்கியது … Read more

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

மொஹாலி: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 222 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் மிகப்பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி மொஹாலி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 4ம் … Read more

நாகப்பட்டினத்தில் கடல் சீற்றம் : 40 வீடுகளில் கடல் நீர் புகுந்து சேதம்

நாகப்பட்டினம் நாகப்பட்டினத்தில் பட்டினச்சேரி பகுதியில் இன்று கடல் சீற்றம் ஏற்பட்டு 40 வீடுகளில் கடல்நீர் புகுந்து சேதம் அடைந்துள்ளது. இரு தினங்களுக்கு முன்பு தென்மேற்கு வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த பகுthi காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.   இது தமிழக கடற்கரையை நோக்கி ந்கர்வதால் தமிழக, புதுவை, காரைக்காலில் கடும் மழை பெய்யும் எனவும் டெல்டா மாவடடங்களிலும் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதையொட்டி இந்த பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் 3 ஆம் எண் … Read more

தமிழகத்தில் இன்று 196 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  04/03/2022

சென்னை தமிழகத்தில் இன்று 196 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,51,013 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 50,298 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,47,11,231 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 196 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.    இதில் ஒருவர் வெளி மாநிலத்தில் இருந்து வந்துள்ளார்.  இதுவரை 34,51,013 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று 3 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 38,015 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 554 பேர் குணம் அடைந்துள்ளனர். … Read more

உலக சாம்பியன்ஷிப், ஆசிய கோப்பை போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை – மேரி கோம்

புதுடெல்லி: உலக சாம்பியன்ஷிப், ஆசிய கோப்பை போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என்று இந்தியக் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தெரிவித்துள்ளார். சர்வதேச அரங்கில் பல வெற்றிகளை ருசித்துள்ள நிலையில், ஆறு முறை உலக சாம்பியனான எம்சி மேரி கோம், நாளை தொடங்க உள்ள வரவிருக்கும் ஐபிஏ எலைட் மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் மற்றும் 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான சோதனைகளில் பங்கேற்பதற்குப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளார். மேரி கோமின் நோக்கம் வரவிருக்கும் குத்துச்சண்டை வீரர்களுக்கு … Read more

மெரினா, பட்டினபாக்கம் கடற்கரைகளில் கடல் சீற்றம்

சென்னை: மெரினா, பட்டினபாக்கம் கடற்கரைகளில் கடல் சீற்றம் காணப்பட்டது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வட தமிழக கடலோர பகுதியில் இருந்து சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும், இதனால், கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் உள் மாவட்டங்களில் … Read more

திமுக வாளும், கேடயமுமாக தமிழ் நிலத்தை என்றும் காக்கும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தந்தை பெரியார்,பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய வழியில் தி.மு.கழகம் வாளும் கேடயமுமாகத் தமிழ் நிலத்தை என்றும் காக்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில்,  “தமிழர் தலைமுறை தழைக்கத் தமிழ்த்தாய் பெற்றெடுத்த பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முதலில் ஆட்சியமைத்த நாள் இன்று,எத்தனை சோதனைகள் – அடக்குமுறைகள் – அவதூறுகள், அத்தனையும் கடந்து தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு எத்தனை எத்தனை சாதனைகள். … Read more

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்து தமிழ்நாட்டை நோக்கி நகர்வதால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று குறிப்ப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், சென்னையில் அடுத்த 12 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் … Read more